Sunday, July 3, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி 25

தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கென்றே சில படங்கள்  ஓகோ என ஓடின. எம்.ஆர்.ராதா,டி.எஸ்.பாலையா  போன்றவர்களின்   குரல் ஏற்ற  இறக்கம் நகைச்சுவையில் உச்சம் தொட்டு விடும்அப்படி ஒரு வித்தியாசமான  க்ரல் வளம் கொண்டவர் சுருளிராஜன். 70/80 களில் சுருளிராஜன் இல்லாத படம் இல்லை என்றே சொல்லலாம்.

எம்ஜிஆர்,சிவாஜி காலத்திலேயே அவர்களுடன் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து தனக்கென ஒரு இடத்தை அந்த காலத்திலேயே நிரந்தரமாக பிடித்த காமெடி நடிகர் தான் சுருளிராஜன் இவர் எம்ஜிஆர்,சிவாஜி காலத்தில் ஒரு நாளைக்கு 50ஆயிரம் வரை சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து வந்துள்ளார்.

 நடிகவேள் எம்.ஆர்.ராதாவைப் போல மிகவும் வித்தியாசமான குரலுக்கு சொந்தக்காரர் நகைச்சுவை நடிகரான சுருளிராஜன். எந்த சினிமா பின்னணியும் இன்றி சினிமா உலகிற்குள் நுழைந்த சுருளிராஜன் 1980-ம் ஆண்டில் மட்டும் சுமார் 50 திரைப்படங்களில் நடித்து சாதனை புரிந்தவர். இந்தச் சாதனை இன்றுவரை யாராலும் முறியடிக்கப்படாத ஒன்று.

மதுரையில்  நாடகங்களில் நடிட்த்தபோது சுருளிராஜனின் நகைச்சுவைக்கும் குரலுக்கும் மயங்கிய ரசிகர் பட்டாளம் சினிமாவில் நடிக்கும்படி உசுப்பேத்தியது. ம்துரையில் இருந்து சென்னைகுப் புரப்பட்ட சுருளிராஜனுக்கு இலகுவில் சந்த்ர்ப்பம் கிடைக்கவில்லை.

சினிமா வாய்ப்பு தேடி 1959-ம் ஆண்டு சென்னையில் இறங்கிய  சுருளிராஜன்  ‘அய்யா தெரியாதய்யாராமராவின் நாடகக் குழுவில் இணைந்தார். அவருடைய முன்னேற்றத்துக்கு ராமராவ் பலவகையில் உதவி செய்தார். சுருளிராஜனின் முன்னேற்றத்துக்கு பெரிதும் காரணமாக இருந்த இன்னொருவர் கதாசிரியரும் இயக்குநருமான டி.என்.பாலு.சிவாஜிகணேசன், கமல்ஹாசன், ஜெய்சங்கர் ஆகியோரது படங்களுக்கு கதை, வசனம் எழுதி இயக்குகின்ற வாய்ப்பை 1970 -களில் பெற்ற டி.என்.பாலுதான்  ஜெய்சங்கர் அறிமுகமான  ஜோசப் தளியத்தின்  ‘இரவும் பகலும்’  படத்தின் கதாசிரியர். அவர் எழுதி இயக்கி, நடித்தநினைக்கவே இல்லைஎன்ற நாடகத்திற்கு இயக்குநர் ஜோசப் தளியத்தை அழைத்திருந்தார் டி.என்.பாலு. அந்த நாடகத்தில்   முக்கிய வேடம் ஒன்றில் நடித்த சுருளிராஜனின் நடிப்பும், அவர் வசனங்களைப் பேசியவிதமும்  ஜோசப் தளியத்தின் மனதில் பதிந்தது.

சுருளிராஜனுக்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகளைத் தரவேண்டும் என்று அன்றே முடிவு செய்து விட்டார் அவர். ஆனால்  அவர் அப்போது இயக்கி கொண்டிருந்தஇரவும் பகலும்படத்தில் எல்லா பாத்திரங்களுக்கும் நட்சத்திரத் தேர்வு முடிந்துவிட்டு இருந்ததால் அந்த படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில்தான் சுருளிராஜனை அவரால் பயன்படுத்த முடிந்தது.

இரவும் பகலும்’  படத்தில்  சுருளிராஜன் நடித்தார். ஆனால், அவரை சரியா  முறையில் சரியான முறையில்  பயன் படுத்த முடியவில்லையே என்ற வருத்தம் ஜோசப் தளியத்திற்கு இருந்ததால் தனது அடுத்த படமானகாதல் படுத்தும் பாடுபடத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் சுருளிராஜனை நடிக்க வைத்தார்.

அந்தப் படத்தில் நடிக்க முன் பணமாக நூறு ரூபாய் நோட்டு ஒன்றை சுருளிராஜனிடம் கொடுத்தார் ஜோசப் தளியத். சுருளிராஜனை அந்த நோட்டு படுத்தியபாடு கொஞ்ட நஞ்சமல்ல

  அந்த நோட்டை கையில் வாங்கியவுடன் சுருளிராஜனுக்கு  ஏற்பட்ட பிரமிப்பு அடங்க ரொம்ப நேரம் ஆனது. ஏனென்றால்  நூறு ரூபாய் நோட்டு என்று  ஒன்று   இருக்கிறது என்று  அவருக்குத்  தெரியுமேதவிர, நூறு ரூபாய் நோட்டை அதுவரை அவர் கண்ணால்  பார்த்ததேயில்லை.

அதிசயமாக அந்த நோட்டையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்த அவர் பய பக்தியோடு  அந்த நோட்டை மடித்து தன பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டார். பின்னர் ஜோசப் தளியத்திற்கு மனதார நன்றி கூறிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்.

அந்த அலுவலகத்திலிருந்து அவரது  வீட்டுக்கு செல்வதற்கு பஸ் டிக்கெட் எடுக்க அவரது கையில் சில்லறைக் காசு எதுவும் இல்லை. அந்த அலுவலகத்திற்கும் சுருளிராஜன் வீட்டுக்கும் இருந்த இடையில இருந்த தூரமோ பல மைல்கள்.

பையில் இருக்கிற நூறு ரூபாயை மாற்றினால் பஸ்ஸிலும் போகலாம், ஆட்டோவிலும் போகலாம். டாக்சியிலும் போகலாம். ஆனால், அதுக்கு நூறு ரூபாய் நோட்டை மாற்ற வேண்டும். அப்படி மாற்றிவிட்டால்   யாரிடமும்  அந்த நோட்டைக் காட்ட முடியாது என்பதால் அந்த நூறு ரூபாய் நோட்டை பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டு அதை தொட்டுத் தொட்டுப் பார்த்தபடியே  பல மைல் நடந்து வீடு போய்  சேர்ந்தாராம் அவர்.

அதற்குப் பிறகு லட்சக்கணக்கில் சுருளிராஜன் சம்பாதித்தார் என்றாலும் அந்த முதல்  நூறு ரூபாய் நோட்டு அவரைப்  பொறுத்தவரை மறக்க முடியாததாகிவிட்டது.

காதல் படுத்தும் பாடுபடத்தைப் பொறுத்தவரையில் அது சுருளிராஜனுக்கு மட்டுமல்லபல பேருக்கு திரையுலகின் வாசல்களைத் திறந்து வைத்த படம்.

அந்தப் படத்தில்தான் கதாசிரியர் கலைஞானம் கதாசிரியராக அறிமுகமானார். வாணிஸ்ரீ தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். எஸ்.எஸ்.சந்திரன் நடிகராக அறிமுகமானார். தமிழ்த் திரையுலகில் பல படங்களுக்கு படத் தொகுப்பாளராகப் பணியாற்றிய  வெள்ளைச்சாமி படத் தொகுப்பாளராக அறிமுகமானதும் இந்தப் படத்தில்தான் .

காதல் படுத்தும் பாடுபடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அந்தப் படத்தில் நடிப்பதற்கான அவரது ஊதியம் மொத்தத்தையும் வாங்கி செலவழித்துவிட்டார் சுருளிராஜன்.

கையில் சல்லிக்காசு இல்லாத  நிலையில் நாடகம் நடத்தலாம் என்று அவர் வெளியூர் சென்றபோது, அங்கே ஒரு  வாரம் கடுமையாக மழை பெய்தது. அதனால் கொஞ்சம் காசு பார்க்கலாம் என்ற எண்ணத்தில் நாடகம் நடத்தப் போன அவரது எண்ணம் ஈடேறாதது மட்டுமல்ல…  பொருளாதார ரீதியாக மிகப் பெரிய சிக்கலை சந்திக்க வேண்டிய சூழலும் அவருக்கு ஏற்பட்டது.

சென்னைக்கு திரும்பவே பெரிதும் சிரமப்பட்டு ஒரு வழியாக சென்னை திரும்பிய  சுருளிராஜனை அவர் குடியிருந்த வீட்டின்  சொந்தக்காரர் வாடகை பணத்தைக் கேட்டு விரட்டு விரட்டு என்று விரட்டினார். மதியம் சாப்பிடவே கையில் காசு  இல்லை.. இந்த நிலையில் வாடகையை எங்கே கொடுப்பது..?

இப்படி எல்லா பக்கத்திலிருந்தும் பிரச்னைகள் சூழ்ந்ததால் விரக்தியின் எல்லைக்கே சென்றார் சுருளிராஜன். இனியும் சினிமா வாழ்க்கையை நினைத்துக் கொண்டு இங்கே இருக்க வேண்டுமா என்றெல்லாம் நினைக்க தொடங்கியது அவர் மனது.

அந்த நேரம் பார்த்து அவரது நண்பர் சிவராஜ்  அவரைப் பார்க்க வர சோகத்தின் உச்சியில் இருந்த சுருளிராஜன்இந்த வாழ்க்கை எனக்கு தேவைதானா?” என்று சலிப்போடு  அவரிடம்  கேட்டார். அவர் இப்படி கேட்டபோது அந்த சோகம் அந்த நண்பரை தொற்றிக் கொள்ளவில்லை. மாறாக அவரது முகத்தில் புன்னகை தோன்றியது

நேராக ஜெமினி கார்னருக்கு ஒரு முறை போய் பார்த்துவிட்டு அதற்குப் பிறகு இந்த வாழ்க்கை உனக்குத் தேவையா இல்லையா என்பதை முடிவு செய்என்றார் நண்பர் சிவராஜ்.

ஏன் அங்கே யாராவது ஜோசியம் சொல்றவங்க இருக்காங்களா?”

அதெல்லாம் உனக்கு எதுக்கு? முதல்ல போய் பார்த்துட்டு வா.. அப்புறம் பேசுஎன்றார் எந்த நண்பர்.

ஜெமினி கார்னருக்கும், தனது வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்று புரியாவிட்டாலும் நண்பர் சொல்கிறாரே என்பதற்காக ஜெமினி பகுதிக்கு நடந்தே சென்றார் சுருளிராஜன்.

அங்கு போய் பார்த்தவுடன் அவரால்  தனது கண்களையே நம்ப முடியவில்லை. தான் காண்கின்ற காட்சி நிஜம்தானா என்று கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தார். அது  போதாதென்று  தன்  கையையும்  ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டார்சுருளிராஜனை  அப்படி ஒரு நிலைமைக்குத்  தள்ளியது  எது தெரியுமா..?

ஜெமினி கார்னரில் வைக்கப்பட்டிருந்த அவரது  மிகப் பெரிய கட் அவுட்.

காதல் படுத்தும் பாடுபடத்திற்காக வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில் அப்படி ஒரு முக்கியத்துவத்தை  சுருளிராஜனுக்குத் தந்திருந்தார் ஜோசப் தளியத்

அந்த விளம்பரத்தைப் பார்த்தவுடன்  சுருளிராஜனின்  கண்களில் இருந்து அவரையுமறியாமல் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. அவரது பசி பறந்து போனது. அதுவரை அவர் மனதில் இருந்த வேதனை எங்கே போனது என்று தெரியவில்லை.

சினிமாவில் இனி தனக்கு எதிர்காலமே இல்லை என்று அவநம்பிக்கையோடு இருந்த சுருளிராஜன், இனி சினிமாதான் தனது வாழ்க்கை என்று  முடிவெடுத்ததிலே  அந்த கட் அவுட்டுக்கு முக்கிய இடம் உண்டு. அதற்குப் பிறகு சுருளிராஜனின் வாழ்க்கையில் இறங்கு முகமே இல்லை.

ஆரம்ப காலங்களில் சிரிய வேடங்களில் நடித்தார்எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் வயதானவர்  வேடத்தில் நடித்தார். இவருடைய பெயர் சுருளி என வரும். நாகேஷ், சந்திரபாபு, பாலையா போன்ற பல காமெடி நடிகர்கள் சினிமாவில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வந்த கால கட்டத்தில் தன்னுடைய தனிப்பட்ட திறமையின் மூலம் ரசிகர்களால் கொண்டாப்பட்டவர். இவர் நகைச்சுவை கதாபாத்திரம் மட்டுமின்றி எந்த ஒரு கதாபாத்திரத்திலும் அற்புதமாக பொருந்த கூடியவர்.

மேலும் அவருடைய குரல் வளமும், வசன உச்சரிப்பும் மிக வித்தியாசமாக இருக்கும். இதன் காரணமாகவே இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் அளவுக்கு அதிக படங்களில் எந்த ஒரு நடிகரும் இதுவரை நடித்ததில்லை என்று சொல்லலாம்.

ஆரம்ப காலகட்டத்தில் மிகச் சில திரைப் படங்களில் மட்டுமே நடித்து வந்த அவர் 1975வது ஆண்டுக்குப் பிறகு அதிகமான படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதிலும் 1980 ம் ஆண்டில் மட்டும் இவர் சுமார் 50 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்த சாதனையை 46 வருடமாக யாராலும் முறியடிக்கவில்லை.

No comments: