Friday, July 30, 2021

நவாலியூரானின் வீசிய புயல்


 மானிப்பாயைப் பூர்வீகமாககொண்ட மதனராசா – மனோஜினி குடும்பம் வட்டக்கச்சியில் குடியேறுகிறது. குடும்பம் பெருகும்போது மன்னார்,வவுனியா ஆகிய நகரங்களில் திருமணபந்தம் ஏற்படுகிறது. அடுத்த தலை முறை தொழில் நிமித்தம் கண்டிக்கு இடம் பெயர்கிறது. இந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் திருகோணமலையில் வேலை செய்கிறார்.

மதனராசா – மனோஜினி  ஆகியோரைச் சுற்றி உள்ள குடும்பங்களுக்கிடையே ஏற்படும் இன்பம்,துன்பம், திருமணம், பிறப்பு,இறப்பு, பிரிவு, கோபம் போன்றவற்றையே ”வீசிய புயல் என நவாலியூரான் நாவலாக்கியுள்ளார்.

சுந்தரபாலன் சுகுணறாஜி ஆகியோரின் குழந்தை பாலகாந்தனுக்கு வயிற்றுப்போக்கு அவனை மானிப்பாய் கி[g]றீன் மெமோறியல் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கிறார்கள். முதல் அத்தியாயத்தில் வைத்தியசாலையின் வரலாற்றை விளக்குகிறார் நாவலாசிரியர்.

பாலகாந்தனின் உடல் நிலை பற்றி வட்டக்கச்சியில் வசிக்கும் சுகுணறாஜியின் சின்னம்மா திருமதி மதனராசா – மனோஜினிக்கு அறிவிக்கப்படுகிறது. அவர்கள் உடனடியாக மானிப்பாய்க்குச் செல்கிறார்கள். வழியில் அவர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகிறது. மனோஜினிக்கு ஏற்பட்ட சிறு காயத்துடன்  எதுவித ஆபத்தும் இல்லாமல்    மானிப்பாயைச் சென்றடைகிறார்கள்.

பாலகாந்தனுக்கு போதியளவு சத்துணவு இல்லை.  மூளை வளர்ச்சி குறைவு குடும்ப நிலை காரணமாக பாலகாந்தனை மதனராஜனும் மனோஜினியும் தம்முடன் அழைத்துச்  செல்கின்றனர் அவர்களின்  பிள்ளைகளான றாஜினா, ஜீவினா, மாஜினா ஆகியோருடன் பாலகாந்தன் வளர்கிறான்.

மதனராஜனின் மில்லில் வேலை செய்யும் விமலனிடம் கணக்கு படித்து வகுப்பில் முன்னிலையடைகிறான். மாஜினாவுக்கு மன்னார் வைத்தியசாலையில் நே[r]ர்ஸ் வேலைகிடைகிறது. மனோஜினியின் பெரிய தகப்பனின் மகன் ஜீவறஞ்சன் மன்னாரில் கடை வைத்திருக்கிறார். அங்கிருந்து மாஜினா வேலைக்குச் செல்கிறார்.

மதனராஜாவின் இரண்டாவது மகள் ஜீவினாவுகும் பிரான்ஸில் வசிக்கும் உறவினரான ஜெயசுதனுக்கும் திருமணப் பேச்சுவார்த்தை நடந்து முற்றுப் பெறுகிறது.ஜீவினா வெளிநாட்டுக்குச் செல்கிறார்.

ஜீவரஞ்சனின் மகன் றஜீவன் திருகோணமலையில் ஹோட்டலில் வேலை செய்கிறார். மன்னார் வைத்தியசாலையில் வேலை கிடத்து அவரும் வீட்டுக்கு வருகிறார்.  மாஜினாவை றஜீவன் விரும்பியதால் திருமணம் நடைபெறுகிறது.

வெட்டுக் காயத்துடன் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வாலிபனுக்கு அவசரமாக இரத்தம் தேவைப்பட்டதால் றஜீவன் தனது இரத்தைத்தைக் கொடுத்தார். அவருடைய தாய் றஜீவனுக்கு நன்றி சொன்னபோது குடும்பங்களைப் பற்றி கதைத்தார்கள். அப்போதுதான் அது தனது தாயின் சகோதரி புஷ்பமாலா என்பதை றஜீவன் அறிகிறார்.  புஷ்பமாலா கிறிஸ்தவரைக் காதலித்து திருமணம் செய்ததால்  குடும்பத்தால் ஒதுக்கப்பட்டவர். அவரைப் பற்றி றஜீவனுக்கு ஒன்றும் தெரியாது. றஜீவனின் முயற்சியால் பிரிந்த சகோதரிகள் ஒன்றானார்கள்.

தமது மில்லில் கணக்குப் பிள்ளையாக வேலை செய்யும் விமலனை தான் காதலிப்பதாக ஜீவினாவுக்கு மதனராஜனின் மூன்றாவது மகள் மாஜினா  தெரிவித்ததார் பிரான்ஸில் இருந்து ஜீவினா அரிவித்ததால் திருமனம் நடை பெறுகிறது.

மாஜினாவும் விமலனும் வவுனியா பாவக்குளத்துக்கு செல்கிறார்கள். மாஜினாவுக்கும்,ராஜீவனுக்கும் கிளிநொச்சிக்கு இடமாற்ரம் கிடைக்கிறது.மில்லை பாலகாந்தன் பொருப்பெடுத்டுச் செய்கிறான். பாலகாந்தனுக்கும் தேனுஜாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. நித்தியா, திவ்வியா எனும் இரண்டு பெண் குழந்தைகள்  பிறக்கின்றன. நவீன மயமான மில் ஒன்ரு அடுத்த ஊரில் திறக்கப்பட்டதால் மில்லை மூட வேண்டிய நிலை ஏறபடுகிறது.

பாலகாந்தனின் உறவினராகிய தவநாயகம் தான் வேலை செய்யும் கொம்பனியில் அவருக்கு  எக்கவுண்ஸ் வேலை பெற்றுக் கொடுக்கிறார். வேலை கண்டியில் என்பதால்   பாலகாந்தனின் குடும்பம் வட்டக்கச்சியை விட்டு இடம் பெயர்கிறது. மனோஜினியின்  மரண வீட்டுகு வந்த பாலகாந்தனின் குடும்பம்  தம்து இரண்டு பிள்ளைகலையும் வட்டக்கச்சியில் விட்டுச் செல்கிறார்கள்.

மனைவியை இழந்த றஜீவன்  யாருக்கும் சொல்லாமல் முதியோர் இல்லத்தில் சேர்கிறார். பாலகாந்தன் குடும்பத்துடன் வட்டக்கச்சியில் குடியேறுகிறார். சில பிரிவுகள், துயரங்களின் பின்னர் குடும்பங்கள் அனைத்தும் ஒன்றாகின்றன. இதனையே “வீசிய புயல் எனும் நாவலாக நவாலியூரான் தந்துள்ளார்.

மக்களின் வாழ்க்கை முறைகள் வரலாறுகள் என்பனவற்றை இந்த நாவலினூடு பதிந்துள்ளார். 23 அத்தியாயங்கள்.சுமார் 50 பாத்திரங்கள் இந்த நாவலில் நடமாடுகிறார்கள். எல்லோருக்கும் பெயர் சூட்டியுள்ளார். இறந்தவர்களையும் பெயரின் மூலமே நாவலாசிரியர் நடமாட விட்டுள்ளார். “ர என்ற எழுத்தை உபயோகிக்காமல் “ற என்றே பெயர் வைத்துள்ளார். ஆங்கிலச் சொற்களின் இடையே ஆங்கில எழுத்துக்களையும் இணைத்துள்ளார்.

ஜீவநதி, பங்குனி 2021

No comments: