Wednesday, July 28, 2021

ஒலிம்பிக் தீபம் ஏற்றிய நயோமி ஒசாக்கா தோல்வி

 டோக்கியோ  ஒலிம்பிக்கில்  தங்கப்பதக்கம் பெறுவார் என  எதிர்  பார்க்கப்பட்ட ஜப்பானின் நம்பிக்கை நட்சத்திரமான நயோமி ஒசாக்கா மகளிர் ஒற்றையர் பிரிவி ஆட்டத்தில் செக் குடியரசின் மார்கெட்டாவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.ஒலிம்பிக்  ஆரம்ப நாளன்று ஒலிம்பிக் தீபத்தை ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நயோமி ஒசாக்கா ஏற்றி வைத்தார்.

  நயோமியின்   ஒலிம்பிக்  தொடர்  வெற்றியோடு  ஆரம்பமாகியதுசீனாவின் செங் சென்சாய்க்கு எதிரான  முதல்  போட்டியில்  6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றபெற்று நம்பிக்கை அளித்தார். அதன்பின் சுவிட்சர்லாந்து விக்டோரிஜாவிற்கு எதிராக 6-3, 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றார். இடனால் நயோமி மீது  எதிர்பார்ப்பு அதிகமானது.

 மூன்றாவது சுற்று ஆட்டத்தில் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசின் மார்கெட்டாவிடம் ஒசாக்கா தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தார். 6-1, 6-4 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்து நயோமி வெளியேறினார்.

No comments: