Monday, December 6, 2021

டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் சாதனை படைத்த அஜாஸ் படேல்


 இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்   நியூசிலாந்தின்  பந்துவீச்சாளர்  அஜாஸ் படேல் 10 விக்கெற்களையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். முதலில் துடுப்பெடுத்தாடிய  இந்தியா சகல விக்கெறக்லையும் இழந்து 325  ஓட்டங்கள் எடுத்தது. மயங்க அகர்வால் ஓஓஒ  ஓட்டங்கள்  அடித்தார்.

சகல விக்கெற்களையும் இழந்த இந்திய  அணி பெவிலியன் திரும்பியபோது அனைத்து  ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டினர்.

அஷ்வின் ஆராவாரமாக தனது உற்சாகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். இதெல்லாம் ஒரு இந்திய வீரருக்காக இல்லை. ஒரு நியூசிலாந்து வீரருக்காக, ஆம், இந்திய அணியின் அத்தனை விக்கெற்களையும் தனி ஒருவனாகவீழ்த்தியநியூசிலாந்தின் அஜாஸ் படேல் இந்தியாவி முதல் இன்னிங்ஸை முவுக்குக்கொண்டுவந்தார்.

ஒரு இன்னிங்ஸில் ஒரு அணியின் அத்தனை விக்கெட்டுகளையும் வீழ்த்துவதென்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் ரொம்பவே அரிதாக நிகழ்த்தப்படும் சாதனை. நூற்றாண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் இங்கிலாந்தை சேர்ந்த ஜிம் லேக்கர் [ எதிர் அவுஸ்திரேலியா   1956  10/53], இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே[ எதிர்  பாகிஸ்தான்  1999  10/74] என இருவர் மட்டுமே இந்தச் சாதனையைச் செய்திருக்கின்றனர். அவர்களின் வரிசையில் மூன்றாவதாக மற்றும் 21-ம் நூற்றாண்டின் முதல் வீரராக ஓர் அணியின் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி அஜாஸ் படேல் [ இந்தியா 2021  10/119 ]தனது பெயரை வரலாற்றில் பதித்திருக்கிறார். பாகிஸ்தானில் அனில் கும்ளே 10 விக்கெட்களை வீத்தியபோது ட்ராவிட்டும், ஜவகல் ஸ்ரீநாத்தும்  உடன் இருந்தனர்.  இந்தச் சாதனையின் போது ட்ராவிட்டும், ஜவகல் ஸ்ரீநாத்தும்  இருந்தனர்.

 ஜிம் லேகர் அனில் கும்ளே இருவரும் வலது கை பந்து வீச்சாளர்கள். அஜாஸ் இடதுகை பந்து வீச்சாளர். முதல் 10 விக்கெற் சாதனைகளும் போட்டியின் கடைசி நாட்களில் வீழ்த்தப்பட்டவை இன்றைய 10 விக்கெற்களும் முதல் இரண்டு நாட்களில் வீழ்த்தப்பட்டவை.

லியான்  [ஆவுஸ்திரேலியா], குரூஸ்னர்  [தென்  ஆபிரிக்கா],சிக்கந்த  பகத்  [பாகிஸ்தான் ],கிரெஜ்ஜா  ] அவுஸ்திரேலியா] ஆகியோர் அதிக பட்சமாக தலா 8 விக்கெட் களை வீழ்த்தியுள்ளனர்.

மும்பை வான்கடே மைதானத்தில் புதினம் பார்த்த அஜாஸ்  அதே மைதானத்தில் சாதனை செய்வார் என நினைத்திருக்க விளையாடுகிறார்.   குஜராத்தி குடும்பத்தில் பிறந்த அஜாஸ் 8 வயது வரை மும்பையிலேயே வளர்ந்திருக்கிறார். அதன்பிறகே அவரின் தந்தையின் தொழில் நிமித்தமாக நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள்.

அங்கே கிரிக்கெட் ஆட தொடங்கிய அஜாஸ் படேல் முதலில் ஒரு வேகப்பந்து வீச்சாளராகவே பயிற்சி செய்திருக்கிறார். 20 வயது வரை வேகப்பந்து வீச்சாளராகவே இருந்திருக்கிறார். ஆனால், நியூசிலாந்து அணியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் அஜாஸுக்கு இடமே கிடைக்கவில்லை. இதனால், தன்னை மறுபரிசீலனை செய்து கொண்டு பயிற்சியாளர் தீபக் படேலின் ஆலோசனைப்படி இடதுகை ஸ்பின் பௌலராக மாறினார். இதன்பிறகே அஜாஸின் கிரிக்கெட் கரியரில் மாற்றங்கள் ஏற்பட தொடங்கின. உள்ளூர் தொடரில் அவர் ஆடிய அணிக்காக 2015, 2016, 2017 மூன்று சீசன்களிலும் அதிக விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்து கலக்கினார். 2018-ல் நியூசிலாந்து அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டார்.

நியூசிலாந்து அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்தபோது 2 போட்டிகளில் 9 விக்கெட்டுகளையும், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் 3 போட்டிகளில் 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.  இந்தியாவில் கான்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நியூசிலாந்தின் மெக்லகன் ஆடியபோது, வான்கடேவில் போட்டிகளை பார்க்க அஜாஸுக்கு டிக்கெட்டுகள் வாங்கிக் கொடுத்திருக்கிறார். சில சமயங்களில் மும்பை அணிக்கு நெட் பௌலராகவும் அஜாஸ் படேல் இருந்திருக்கிறார்.

ஆனால், இப்போதுதான் முதல் முறையாக ஒரு அணிக்காக அதிகாரப்பூர்வமாக வான்கடேவில் ஒரு போட்டியில் ஆடுகிறார். 5 விக்கெட்டுகளை எடுத்து வான்கடேவின் ஹானர்ஸ் போர்டில் இடம்பிடித்து சொந்த மண்ணில் தனது பெயரை பதிக்க வேண்டும் என நினைத்தவர், யாரும் எதிர்பாரா வகையில் 10 விக்கெட்டுகளை எடுத்து வரலாற்றிலேயே தனது பெயரை பதித்துவிட்டார்.

No comments: