Wednesday, December 29, 2021

உரிமைகளை நிலைநாட்டும் நாள் சர்வதேச மனித உரிமைகள் தினம்


 உலகின் வாழும் மக்களில் பலரும் சில நாட்களை சிறப்பாக்கொண்டாடுகின்றனர். பிறந்தநாள், திருமணநாள் என்பனவற்றை  கொண்டாடும்போது உவகை ஏற்படுகிறது. உலகின் விழிப்புணர்வுக்காக சர்வதேச அமைப்புகள்  சிலவற்றை தேர்ந்தெடுத்துள்ளது.. டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம். இந்தத் தினம் அறிவிக்கப்பட்டபோது இலங்கையில் உள்ளவர்கள் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை.

 சகல வளமும் உள்ள நாட்டில் வாழ்பவர்களுக்கு    மனித உரிமைகள் பற்றிய  விழிப்புணர்வு பெரிதாகத் தேவைப்படுவதில்லை.

1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவான அடுத்தாண்டு, மாசி மாதம் 16ஆம் திகதி ஐக்கிய நாடுகள் 'மனித உரிமை ஆணைக் குழு' உதயமானது. 53 நாடுகளை அங்கமாகக் கொண்ட இக் குழு, முதல் வேலையாக 'அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தை உரு வாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமை யில் ஒரு குழுவை அமைத்தது.இக்குழுவின் சிபாரிசின் படி 30 பிரிவு களின் கீழ் மனித உரிமைகள் இனங் காணப்பட்டு சர்வதே மனித உரிமைகள் பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. 1948ஆம் ஆண்டு, டிசெம்பர் 10ஆம் திகதி பாரிஸில் நடை பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபை யினால் இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடு கள் அங்கீகாரம் வழங்கியது.டிசெம்பர் 10 என்ற இதே நாளை 1950ஆம் ஆண்டிலிருந்து 'அனைத்துலக மனித உரிமைகள் நாளாக' அறிவித்து கொண்டாடப்பட்டு வருகிறது. உலகத் தில் பிறக்கும் எல்லா மனிதர்களும் சம மான உரிமைகளும், அடிப்படைச் சுதந்திரங்களும் கொண்டிருக்கின்றனர் என்ற உண்மையை இக்காலப்பகுதியில் சர்வதேசம் உரத்து குரல் எழுப்பவேண் டிய நிலையிருக்கின்றது.

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மறைமுக தாக்குதல் ஆரம்பனான போது மனித உரிமை பற்றிய குரல் குரல் மெதுவாக ஒலிக்கத் தொடங்கியது. கைது செய்தல், காணாமல் போதல் , கடத்தப்படுதல் ஆகியனவற்றால்  மனித உரிமை பற்றிய குரல் சத்தமாக ஒலிக்கத்தொடங்கியது.  நாள் செல்ல செல்ல  மனித உரிமைக்கான குரல்  அழுகையாக கலங்கடிக வைக்கிறது.

ஜே.வி.பி   புரட்சியை கிளர்ச்சி என்கிறார்கள். தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதம் என்கிறார்கள். அவர்களுக்கு பொது மன்னிப்பு. தமிழர்க ளுக்கு மன்னிப்பு இல்லை. இதுமனித   உரிமை மீறலுக்குள் அடங்காது என்பது  இங்குள்ள சிலரின் வாதம். காணாமலாக்கப்பட்டவர்களின் நிலை, யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதி என்பன இன்னமும் கணக்கில் எடுக்கப்படாமல் உள்ளன. ஒரு மனிதனின் உரிமை பாதிக்கப்படும் போதே உரத்துக் குரல் கொடுக்கக்கப்பட வேண்டும்.  இங்கு  ஒரு சமூகம் துவண்டுபோயிருக்கையில் உகலம் பெரிதாகக் குரல் கொடுக்கவில்லை.

பாதிக்கப்பட்டவனுக்கு பரிகாரம் கொடுக்காமல் அடக்கு முறையை ஏவியவர்களிடம் நீதி கோரி விண்ணப்பம் செய்கின்றன உலக நாடுகள்.

உலகில் பிரக்கும் எல்லா உயிருக்கும் வாழ்வதர்குரிய வழியை இயற்கை ஏற்படுத்தியுள்ளது.  பேராசை பிடித்த  மனிதர்களால்  உரிமைகள் மறுக்கப்படும் போது அதற்கெதிராக தனித் தனியாக  ஒலித மனித உரிமைக்கான குரல்  இன்று  உலகின் ஒட்டுமொத்தக் குரலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

தந்தையும், தாயும் கூடிக் குலாவி வாழ்ந்த நிலப்பரப்புகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மக்கள் தமது  நிலத்தை மீட்க போராட வேண்டிய  நிலை உள்ளது. இறந்த உறவுகளை நினைத்து அஞ்சலி செய்ய முடியாத நிலை உள்ளது.   தமிழப் பகுதிக்கு ஒரு நீதி, சிங்களப் பகுதிக்கு ஒரு நீதி.  தமிழ் மக்களின்  உரிமைகள் மறூக்கப்படும்போது உலக நாடுகள்  உரத்துக் குரல் கொடுக்கின்றன. அந்தக் குரலுக்குள்ளும் அந்த நாடுக ளின் அரசியல் கலந்துள்ளது.

 மனித உரிமைகள் பல சரத்துக்களால் உருவாக்கப்பட்டன. உலகின்  பல நாடுகள்  அவற்றுக்கு மதிப்பளிப்பது இல்லை. மனிதனின் உரிமைகளை நிலை நாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட மனித உரிமைகள் தினம்வெறும் சம்பிரதயமாகவோ அல்லது சடங்காகவோ இருக்கக்கூடாது. மனித உரிமைகளி  மீறும் நாடுகளூக்கு எதிராக உலக நாடுகள் அணிதிரள வேண்டும் அப்படியான  ஒரு நிலையில் உலக நாடுகள் இல்லை.

சமூக ஆர்வலர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் மனித உரிமைக்காகப் போராடி வருகின்றனர். உலகில் உள்ள பல அரசியல் தலைவர்கள் மனித உரிமைபற்றி பேசிவிட்டு  அல்லது அறிக்கைஅயை வெளியிட்டவிட்டு தமது அடுத்தகட்ட அரசியல் துரங்கத்துக்குள் சென் றுவிடுகின்றனர்.

மனித உரிமைகள் வெறும்  காகிதத்தில் இல்லாது  நடை முறைப் படுத்கப்படும்போதுதான்  மனிதனின்  உரிமைகள் நிலை நிறுத்தப்படும் சூழ்நிலை ஏற்படும்.

No comments: