Monday, December 13, 2021

48 மணி நேர அவகாசத்தில் வெளியேற்றப்பட்ட கப்டன்

இந்திய  கிரிக்கெட் அணியின் வெற்ரிகரமான கப்டன் கோலிக்கு இப்படி ஒரு நிலை ரும் என எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தென். ஆபிரிக்க டெஸ்ட் அனியின் கப்டனாக கோலியின் தலைமையில் விளையாடும் அணி வீரர்களின்  பெயர் விபரம் வெளியிடப்பட்ட பின்னர் ஒருநாள் போட்டி அணி தலைவராக ரோஹித் சர்மா  அறிவிக்கப்பட்டார். இதனால் கோலியின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கெனவே ரி20 போட்டிகளுக்கான ப்டன் பதவியிலிருந்து கோலி விலகிவிட்டார்.

கங்குலிக்குப் பின்னர் ஆக்ரோசமான கப்டனாக வலம் வந்தவர் கோலிவாழ்க்கை ஒரு வட்டம் என்று தொடங்கும் வசனம் திருமலை திரைப்படத்தில் விஜய் பேசியது விராட் கோலிக்கு பொருந்தி இருக்கிறது இந்திய கிரிக்கெட்டில் தமக்கு நிகர் ஆளே இல்லாத ராஜாவாக திகழ்ந்தார் விராட் கோலி

விராட் கோலி ப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான விஷயமாக இருந்தாலும் இது சில காலமாகவே எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புதான். அதை பிசிசிஐ அறிவித்தவிதம்தான் பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ரி20 போட்டிகளில் ப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்த போது, பிசிசிஐ செயலாளர் கங்குலி, கௌரவ செயலாளர் ஜெய் ஷா என பலரும் வீடியோ பதிவில் கோலிக்கு நன்றி கூறியிருந்தனர். ஆனால், இங்கே ஒரு நாள் போட்டிகளின் கப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குவதாகவோ அல்லது அவருக்கு நன்றி தெரிவித்தோ பிசிசிஐயின் ட்வீட்டில் ஒரு வரி கூட இல்லை. வெறுமென ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் ப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 ஒரு நாள்  போட்டிகளில் ப்டனாக விராட் கோலியின் வெற்றி சதவிகிதம் 70.43%. இது இந்திய அணியின் வேறெந்த ப்டன்களின் சாதனைகலை விடவும் அதிகம்.

19 இருதரப்பு ஒருநாள் தொடர்களில் கோலி இந்திய அணியை வழிநடத்தியிருக்கிறார். இதில் 15 தொடர்களில் இந்தியா வென்றிருக்கிறது. அவு தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியா  ஆகிய நாடுகளில் கப்டனாக  தொடரை வென்று கொடுத்திருக்கிறார்.

2017 சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப்போட்டி வரையும் 2019 உலகக்கோப்பையில் அரையிறுதி போட்டி வரையும் இந்திய அணியை அழைத்து சென்றிருக்கிறார். திடீரென ப்டன் பதவியை பறிக்கும் அளவுக்கு கோலி ஒரு மோசமான கேப்டன் இல்லை.

பிசிசிஐக்கும் விராட் கோலி க்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ரி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு தனித்தனி கப்டன் இருப்பதை பி.சி.சி. விரும்பவில்லையாம். இதன் காரணமாக ஒருநாள் போட்டிக்கான கப்டன் பதவியில் இருந்து தானாக முன்வந்து பதவி விலகுமாறு விராட் கோலியை பிசிசிஐ கேட்டுக் கொண்டது. ஆனால் கோலி அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

2023ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டி வரை அணியின் கப்டனாக இருந்து 50 ஓவர் உலகக் கிண்ணத்தை வென்று கொடுப்பேன் என்று கோலி கூறியுள்ளார். ஆனால் பி.சி.சி. யின் அதிகாரிகள் எவ்வளவு பேசியும் சமாதானம் ஆகவில்லை. இதனால் இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பிசிசிஐ அதிகாரிகள் விராட் கோலி பதவி விலக 48 மணி நேரம் கெடு விதித்தனர்.

 அந்த 48 மணி நேரத்தில் பதவி விலகவில்லை என்றால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று பி.சி.சி. எச்சரித்ததாக கூறப்படுகிறது. மேலும் தான் எடுத்த முடிவிலிருந்து மாறாத கோலி பதவி விலகாததால் அவரை கப்டன் பதவியிலிருந்து பி.சி.சி. நீக்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி 95 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 65 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  ஏற்கனவே ரி20 கிரிக்கெட் துணைக் ப்டனாக இருக்கும் கே.எல்.ராகுல் ஒருநாள் போட்டிகளுக்கான அணிக்கும் துணை ப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது. ரோஹித்துக்கு பிறகு கேஎல் ராகுல் அணியின் ப்டனாக நியமனமாவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதால் அவரே துணை ப்டனாக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. தற்போது 29 வயதில் இருக்கும் ராகுல் இன்னும் ஆறு ஏழு ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவார் என்பதனால் அவரை துணை கேப்டனாக மாற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இது குறித்தான அறிவிப்பும், தென்னாப்பிரிக்க தொடருக்கான ஒருநாள் அணியும் ஒரே நேரத்தில் வெளியாகும் என்றும் தெரிகிறது

No comments: