Sunday, January 16, 2022

சீமானின் அரசியல் இலங்கைத்தமிழருக்கு சாதகமா? பாதகமா?

இலங்கைத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் இருந்து பலர் குரல் கொடுத்தார்கள். இப்போது சீமானின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த சீமான் திராவிட முன்னேற்றக் கழகத்தால் ஈர்க்கப்பட்டார். சினிமா மூலம் அறிமுகம் பெற்ற சீமான் இப்போது முழு நேர அரசியல்வாதியாக மாறிட்டார்.

இன்றைய அரசியல்வாதிகளில் நரம்பு புடைக்க உணர்ச்சிவசமாகப் பேசும் சீமானின் பேச்சில் இளைஞர்கள் மயங்கிக் கிடக்கின்றனர்.   வரம்பு மீறிய சீமானின் பேச்சை இளம் வயதினரைக் கவர்ந்துள்ளது. தொண்டை கிழியப் பேசும் சீமான் காத்திரமான பணி எதனையும் செய்யவில்லை. சீமானின் பேச்சைக் கேட்டு  கைதட்டி கலைந்துபோகும் கூட்டம் தான் சீமானின் பின்னால் உள்ளது.

வைகோ, பழநெடுமாறன்,கருணாநிதி,எம்.ஜி.ஆர் போன்ற தமிழக அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள். அவர்கள் தமது பணத்தை இலங்கைத் தமிழர்கலுக்காக செலவு செய்தார்கள். சீமானும்  இலங்கைத் தமிழ் மக்கலுக்கு ஆதர்வாகக் குரல் கொடுக்கிறார். அவர் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழ் மக்களின் காசில்தான் கட்சியை நடத்துகிறார்.

தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத சீமானால் அங்கிருந்து எந்த விதமான  அழுத்தத்தையும் கொடுக்க முடியாது. சீமானை எதிர்ப்பவர்கள் மீது " துரோகி" பட்டத்தை எம்மவர்கள் சூட்டுகிறார்கள்.

அஹிம்சைப் போராட்டம், அறவழிப்போராட்டம், சட்டமறுப்புப் போராட்டம்ஆயுதப் போராட்டம், சமாதானப் பேச்சு வார்த்தை போன்றவற்றால் தீர்க்க முடியாத பிரச்சினையை சீமானின் உணர்ச்சிகரமான பேச்சு தீர்த்து விடும் என சிலர் கனவு காண்கிறார்கள்.

இலங்கையில் தலைவருடன் ஆமைக்கறி சாப்பிட்டேன் என்ற சீமானின் வாக்கு மூலத்தை வன்னியில் இருந்தவர்கள்  நம்பத் தயாராக இல்லை.

 

பழிக்குப்பழி, இரத்தத்துக்கு இரத்தம் என்ற சீமானி பேச்சால்  எதுவும் நடைபெறப்போவதில்லை.முகப் புத்தகம், டுவிட்டர், வட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தள அரசியல் மூலம் தீர்வை எட்ட முடியாது தமிழக கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற முடியாத சீமானை நம்பி புலம் பெயர் தமிழர்கள்  பணத்தை வாரி இறைக்கிறார்கள். தமிழகத்தில் இருந்து சீமான் உரத்து கத்தினாலும் அது இலங்கையில் உள்ள சிங்கள அரசியல்வாதிகளி காதில் விழப்போவதில்லை.

நான் முதலமைச்சரானால், ராஜீவ் கொலைக் குற்றவாளைகளை உடனடியாக விடுதலை செய்வேன் என சபதம் செய்துள்ளார் சீமான். அந்த ஏழு பேரின் விடுதலைக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுத்து மத்திய அரசுக்கு சவால் விட்டவர். ஜெயலலிதா. அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த உணமை தெரியாது இலங்கைத் தமிழர்களை உசுப்பேற்றுவதற்காக சீமான்  பேசுவதெல்லாவற்றையும்  இளம் சமுதாயம் உண்மை என நம்புகிறது.

சீமானின் பேச்சு ஒன்றும் புதியதல்ல. சாமானிய அரசியல்வாதிகள் பேசும் வறுமை, வேலைவாய்ப்பின்மை,ஏழ்மை  என்பனவற்றையே சீமானும் வெறிப்படுத்துகிறார். வரம்பு மீறி ஆளும் கட்சியை அவர் தாக்கிப் பேசுவதை பலர் விருப்புடன் பார்க்கிறார்கள். அந்தப் பார்வையளர்கள், வாக்காளர்கள் அல்ல  என்பதை சீமான்  உணர வேண்டும்.

விரல்களை மடக்கி ஒரு கையை உயர்த்தி உணர்ச்சிகரமாகப் சீமான் பேசும்போது கவர்ச்சியாக இருக்கும். நெஞ்சுக்கு நேரே ஒருகையை நீட்டி சீமானின் நாம் தமிழர்கட்சி அங்கத்தவர்கள் சபதம் எடுப்பார்கள். இவை இரண்டு சம்பவங்களும் ஹிட்லரை நினைவூட்டுவதாக உள்ளன.

தமிழகத்தில் சினிமா மாயையால் அரசியல் தலைவர்கள் உருவாகுவதுபோல் இலங்கையில்  நடைபெறுவதில்லைஇலங்கைத் தமிழர்களுக்குத் தலைமைவகிக்கும் தகுதி சீமானுக்கு இல்லை.

  2006 தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாக சீமான் பிரசாரம் செய்தார். இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போர் முடிவுக்கு வந்த நேரத்தில், தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் அன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு எதிராக அதிருப்தி நிலவியது. அந்த நேரத்தில் 2009 ஆம் ஆண்டு நாம் தமிழர் இயக்கத்தை மதுரையில் தொடங்கினார் சீமான். அடுத்த ஆண்டே மே மாதம் இந்த அமைப்பு அரசியல் கட்சியாக உருமாற்றம் அடைந்தது. சிவப்புக் நிறத்தில் நடுவேபெரிதும் சிறிதுமான கோடுகளுக்கு மத்தியில் புலித்தலை நாம் தமிழரின் கொடி. இது புலிகளின் கொடியை ஞாபகப்படுத்துகிறது.

 2011 தமிழக   தமிழக சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்கூட்டணியை எதிர்த்த்ப் பிரசாரம் செய்தார்.   2011 சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்ததுதிராவிட முன்னேற்றக் கழகத்தையும், அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகத்தையும் மிக மோசமாக திட்டும்  சீமன் முன்பொரு காலத்தில் இரண்டு கட்சித்த லைவர்களுடனும் ஒட்டி உறவாடியவர்.

நாம் தமிழர் இயக்கத்தை சீமான் ஆரம்பித்த காலம் முதல்வேலுப்பிள்ளை பிரபாகரனை முன்னிறுத்திய, தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதான காட்சிகளை அவர் அரங்கேற்றி வருகிறார். அதுதான், ஆரம்ப நாள்களில் அவருக்கான அத்திவாரத்தைப் போடுவதற்கும் உதவியது. குறிப்பாக, புலம்பெயர் தேசங்களில் இருந்து, நிதி ஆதாரங்களைப் பெறுவதற்கு உதவியது. நாம் தமிழருக்கும், சீமானுக்கும் நிதியளிக்கும் மூலங்களில், இன்றைக்கும் புலம்பெயர் தமிழர்களே முதலிடத்தில் இருக்கிறார்கள்ஆனால், இலங்கைத் தமிழ்த் தேசியத்துக்கும், இந்தியத் தமிழ்த் தேசியத்துக்கும் நிறைய வேருபாடுகள் உள்ளன.

 மேற்கத்திய நாடுகளில் வாழும் தமிழர்கள் சீமானுக்கு ஆதரவளிக்கின்றனர்பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து என்று பல நாடுகளில் வாழும் தமிழர்களில் பலர் சீமானை தமது இனத்தின் மீட்பராக பார்க்கின்றனர். அதனால் நிறையப் பணம் அனுப்புகிறார்கள். சீமானின் அரசியல் வண்டி தடம் பிரண்டபின்னர்தான் உண்மைத்தன்மை வெளிவரும்.

 

No comments: