Sunday, January 9, 2022

வர்ணனையாளராக மாறிய அவுஸ்திரேலிய பிரதமர்

இங்கிலாது,அவுஸ்திரேலிய  அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டிது சிட்னி மைதானத்தில் நடைபெறபோது,மூன்றாம் நாள் ஆட்டத்தை பார்க்க வந்திருந்த அவுஸ்திரேலிய நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் திடீரென வர்ணனையாளர் அறைக்குச் சென்று   திடீரென மைக்கை பிடித்து வர்ணனை செய்ய ஆரம்பித்தார்.   கில்கிறிஸ்ட், ஈசா குஹா ஆகியோருடன் இணைந்து சில நிமிடங்கள் அவர் போட்டியை வர்ணனை செய்தார்

 ஒரு நாட்டின் பிரதமரே நேரடியாக வர்ணனையாளர் அறைக்கு சென்று போட்டியை வர்ணனை செய்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. போட்டியின் நேரலையில் பேசிய அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில் :

" இங்கு இந்த போட்டியை வர்ணனை செய்வதை நான் மிக சிறப்பாக பார்க்கிறேன். இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான மக்கள் வந்துள்ளனர். மெக்ராத் தலைமையின் கீழ் செயல்படும் கான்சர் அறக்கட்டளை நிறுவனத்திற்காக இந்த பிங்க்பால் டெஸ்ட் போட்டி நடத்தப்படுகிறது. அவரது இந்த நல்ல நோக்கம் மென்மேலும் தொடரவேண்டும். அதில் நானும் ஒரு பங்காற்றி இருப்பதில் மிகப் பெரும் மகிழ்ச்சி.

 எங்களுடைய அரசும் அவரது அறக்கட்டளைக்கு எப்போதும் ஆதரவளித்து வருகிறது. அவுஸ்திரேலியர்கள் மட்டுமல்லாமல் இந்த பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் பங்கேற்று வரும் அனைத்து அணிகளுக்கும், இந்த போட்டியை சப்போர்ட் செய்பவர்களுக்கும் நன்றி"என்று அவர் தெரிவித்துள்ளார். 

No comments: