Monday, February 13, 2023

போராட்டங்களால் அதிர்ந்த கொழும்பு

அரசாங்கத்தின் புதிய வருமான வரிக் கொள்கைக்கு எதிராக   தொழிற்சங்கங்கள்   மிகப் பெரிய போராட்டத்தை  கொழும்பில் நடத்தின.  13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தை அமுல் படுத்தக் கூராது என பெளத்த பிக்கிகள்  போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டங்களை அடக்குவதர்கு பதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), இலங்கை மின்சார சபை (CEB), பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், இலங்கை துறைமுக அதிகார சபை (SLPA), தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWS&DB), பல வங்கிகள், இலங்கை விமான போக்குவரத்து உட்பட 40 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் புதிய வருமான வரிக் கொள்கையை எதிர்த்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் (SLATCA) மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இணைந்து இன்று நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கப்  போராட்டத்தை  முன்னெடுத்தன. மொன்றை முன்னெடுத்தன.

போராட்டம்  வெற்றி பெற்றதாக  போராட்டக் காரர்கள் அறிவித்தனர். ஆனல், மக்கள் பட்ட துயர துன்பத்தை அவர்கள் கணக்கில் எடுக்கவில்லை. தொழிற்சங்கப் போராட்டத்தினால் 1 பில்லியனுக்கும் அதிகமான நஷ்டத்தை  இலங்கை எதிர் நோக்கி உள்ளதாக எதிர்நோக்கியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க   தெரிவித்தார்.

நெருக்கடியானதருணத்தில் நடைபெறும் போராட்டங்கள் தவறான சமிக்ஞைகளை வெளிப்படுத்தும் என  பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  இலங்கை தனது கடன் நிவாரணத்திற்காக சர்வதேச உதவியை நாடிய நேரத்தில் இவ்வாறான எதிர்ப்புக்கள் அதன் உலகளாவிய பங்காளிகளுக்கு தவறான சமிக்ஞையை அனுப்பியதாக   மூத்த பொருளாதார நிபுணர் கூறினார்.போராட்டங்களால்  ந்ந்ர்படும் இழப்புகளை உடனடியாக ஈடு செய்ய முடியாது. 1000 க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.

அத்தியாவசியப் ஒருட்கள், மருந்துகள்,  போன்றவற்ருக்கும் வரி விதிக்கப்படுகிறது. ஆடம்பரப் ஒருட்கலுக்கு விதிக்கப்படும் வரியால் ஏழைகள் பாதிக்கப்படமாட்டார்கள். வருமானத்துக்கு விதிக்கப்பட்ட வரியை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வரியில் திருத்தம் செய்யப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வரியை  முற்றாக நீக்க வேண்டும்  இல்லையேல் போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

நெருக்கடியானதருணத்தில் நடைபெறும் போராட்டங்கள் தவறான சமிக்ஞைகளை வெளிப்படுத்தும் என  பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  இலங்கை தனது கடன் நிவாரணத்திற்காக சர்வதேச உதவியை நாடிய நேரத்தில் இவ்வாறான எதிர்ப்புக்கள் அதன் உலகளாவிய பங்காளிகளுக்கு தவறான சமிக்ஞையை அனுப்பியதாக   மூத்த பொருளாதார நிபுணர் கூறினார்.போராட்டங்களால்  ந்ந்ர்படும் இழப்புகளை உடனடியாக ஈடு செய்ய முடியாது. 1000 க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.

அத்தியாவசியப் ஒருட்கள், மருந்துகள்,  போன்றவற்ருக்கும் வரி விதிக்கப்படுகிறது. ஆடம்பரப் ஒருட்கலுக்கு விதிக்கப்படும் வரியால் ஏழைகள் பாதிக்கப்படமாட்டார்கள். வருமானத்துக்கு விதிக்கப்பட்ட வரியை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வரியில் திருத்தம் செய்யப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வரியை  முற்றாக நீக்க வேண்டும்  இல்லையேல் போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

1980ல், அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன,   40,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து பொது வேலை நிறுத்தத்தை நசுக்குவதில் வெற்றி பெற்றார். அவருக்கு நாடாளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பலம் இருந்தது, அப்போது எதிர்க்கட்சி மிகவும் பலவீனமாக இருந்தது. ஜெயவர்த்தன அரசாங்கத்துடன் அரசியல் நாடகம் ஆடிக்கொண்டிருந்த ஜே.வி.பி., பதினொன்றாவது மணி நேரத்தில் அந்த வேலைநிறுத்தத்தில் இருந்து விலகி, வேலைநிறுத்தக்காரர்களின் மன உறுதியை முடக்கியது.  இன்று அப்படியான ஒரு நடவடிக்கயை   எடுப்பதற்கு ஜனாதிபதி ரணிலால் முடியாது.

மூன்று தசாப்தங்களாக 13 எனும்  இலக்கம் இலங்கை அரசியலை  உலுக்குகிறது.13 ஐ  அமுல் படுத்தப் போவதாக ரணில் அறிவித்ததும், பிக்குகள் வீறுகொண்டு எழுந்துள்ளனர்.  இப்படி  ஒரு எதிர்ப்பு கிளம்பும் அந்த எதிர்ப்புக்கு ஜ்னாதிபதி பணிந்து  போவார் என்பது அரசியலின் அரிச்சுவடி. போராட்டன் க்களால் இலங்கை யின் எதிர்காலம்  கீழ் நோக்கிப் போகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.  

No comments: