Tuesday, February 21, 2023

மூன்று இடங்களுக்கு பத்து நாடுகள் போட்டி

மகளிர் உலகக்கிண்ண  போட்டியில் தகுதி  பெறுவதற்காக 10 நாடுகள் காத்திருக்கின்ற‌ன். பிளே ஃஓவ் போட்டிகளில் வெற்றி பெறும்  மூன்று நாடுகள்  உலகக்கிண்ண போட்டியில் விளையாடுவ‌தற்கு தகுதி பெறும். கடந்த‌ சனிக்கிழமை நடந்த    பிளே-ஆஃப் தொடக்க ஆட்டத்தில் க‌மரூன் 2-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தையும், ஹைய்ட்டி 4-0 என்ற கோல் கணக்கில் செனகலையும் தோற்கடித்தன‌.

பிளே-ஆஃப்களில் 10 அணிகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன, மேலும் குழு வெற்றியாளர்கள் மட்டுமே இந்த அவுஸ்திரேலியா , நியூசிலாந்து  ஆகியன இணைந்து நடத்தும் 32 அணிகள் கொண்ட உலகக் கிண்ண இறுதிப் போட்டியில்  விளையாட உள்ளன.  .

பிளே-ஆஃப்கள் ரவுண்ட்-ராபின் முறையில் விளையாடப்படாது. மாறாக, போர்ச்சுகல், கேமரூன் ,தாய்லாந்து ஆகிய  அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில்  வெற்றி பெறும் அணியை  குரூப் ஏ பிரிவில் இடம் பிடிக்கும்.

குழு B இல்,விளையாட  செனகல் , ஹைய்ட்டி, சிலிக்கு ஆகியன   மோதுகின்றன.  அதே நேரத்தில் C குழுவில், சீன தைபே வ்ச் பராகுவே மற்றும் பப்புவா நியூ கினியா வ்ச் பனாமா ஆகியன  காத்திருக்கின்றன 

கேமரூன் இப்போது போர்ச்சுகல் மற்றும் ஹைட்டியை அடுத்த புதன்கிழமை சிலியை எதிர்கொள்கிறது, முறையே ஆ மற்றும் B பிரிவில் இருந்து தகுதிச் சுற்றுகளை தீர்மானிக்கிறது.

பீப‌ மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் தகுதியை நிர்ணயம் செய்ய பிளே-ஆஃப் போட்டி நடத்தப்படுவது இதுவே முதல் முறை.

குரூப் பி: அவுஸ்திரேலியா, அயர்லாந்து, நைஜீரியா, கனடா

குழு சி: ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஸாம்பியா, ஜப்பான்

குழு டி: சீனா, இங்கிலாந்து, டென்மார்க், குரூப் பி பிளே ஆஃப் வெற்றி

குழு ஏ: அமெரிக்கா, வியட்நாம், நெதர்லாந்து, குரூப் ஏ பிளே-ஆஃப் வெற்றி

குரூப் எஃப்: பிரான்ஸ், ஜமேக்கா, பிறேஸில், குரூப் சி பிளே ஆஃப் வெற்றி

குரூப் ஜி: சுவீடன், தென்னாப்பிரிக்கா, இத்தாலி, ஆர்ஜென்ரீனா

குழு எச்: ஜேர்மனி, மொராக்கோ, கொலம்பியா, தென் கொரியா

No comments: