Monday, February 27, 2023

சென்னைக்கு அதிர்ச்சி கொடுத்த பென் ஸ்டோக்ஸ்

 

 சின்னை சூப்பர் கிங்ஸ் வீரரான   பென் ஸ்டோக்ஸ் அனைத்து ஐபிஎல் கிரிக்கெட்  போட்டிகளிலும்  இடம் பெறமாட்டார் என்ற அறிவிப்பு சென்னை ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

 ஐபிஎல் நடப்பு சீசன் தொடர் மார்ச் 31ஆம் திகதி தொடங்கி மே 28ஆம் திகதி வரையில் நடைபெறுகிறது. இந்த முறையும் சென்னை அணிக்கு மகேந்திர சிங் டோனி கப்டனாக செயல்படவுள்ளார். இந்த போட்டியுடன், டோனி ஐபிஎல் போடிகளில் இருந்து விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மே 14 ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டம்தான் தோனி விளையாடும் கடைசி ஆட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நடந்த முடிந்த ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை அணி நிர்வாகம் ரூ. 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. டோனிக்கு பின்னர் கப்டன் பொறுப்பு ஸ்டோக்சிற்கு வழங்கப்படலாம் என்று ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுனர்களும் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி பகுதியில் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அயர்லாந்து , அவுஸ்திரேலியா ஆகிய   அணிகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூன் மாதத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்கான பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளதால், பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல்லின் கடைசி சில ஆட்டங்களில் இடம்பெற மாட்டார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

No comments: