Saturday, February 25, 2023

சன்ரைசர்ஸ் அணிக்கு புதிய கப்டன் நியமனம்



ஐ.பி.எல்., 2023 போட்டிக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கப்டனாக தென்னாப்பிரிக்க அணியின் வீரர் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு நேற்று வியாழக்கிழமை று வெளியாகியுள்ளது. 28 வயதான மார்க்ரம், தென்னாப்பிரிக்க அணிக்காக 33 டெஸ்ட், 47 ஒருநாள், 31 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சமீபத்தில் தென்னாப்பிரிக்கா ரி20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்குத் கப்டனாக இருந்தவர் மார்க்ரம். இதன் காரணமாக ஐ.பி.எல் போட்டியிலும் சன்ரைசர்ஸ் அணியின் கப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரு ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் மிக மோசமாக விளையாடியது என்ற விமர்சனம் தொடர்ந்து எழுந்து வந்தது. 2021 ஐபிஎல் தொடரில் 3 வெற்றிகள் மட்டுமே பெற்ற சன்ரைசர்ஸ் அணி, 2022-ல் 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தையே பிடித்தது.

கடந்த இரண்டு ஐபிஎல் சீசனில் 28 ஆட்டங்களில் 9 வெற்றிகள், 18 தோல்விகள், ஒரு டை என பலவீனமான அணியாகவே அந்த அணி கருதப்பட்டது. இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி வெளியேறினார். அதன் பிறகு, பிரபல முன்னாள் வீரர் பிரையன் லாரா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கடந்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் கப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் இந்த ஆண்டு குஜராத் அணியில் விளையாடவுள்ளார்.

No comments: