Tuesday, April 11, 2023

காலிமுகத்திடல் போராட்டம் நடந்து ஒரு வருடமாகிறது


 அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு, சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் பற்றாக்குறை, உணவுப் பொருள் தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் அரசு மீது அதிருப்தி கொண்ட பல்வேறு தரப்பினரும் 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆம் திக அன்றைய ஜனாதிபதி கோத்தாவின்  இல்லத்தை முற்றுகையிட்டனர்.   சமூக ஊடகங்கள்  மூலமாக பரவிய செய்தியையடுத்து    நூற்றுக் கணக்கானவர்கள்  ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்டனர்.     வீதிமறியல் கல்வீச்சு ,வீதி மறிப்பு எனபவற்றின் உச்சக் கட்டமாக  இராணுவ  பொலிஸ் வண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டன. 

கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப்புகை , தண்ணீர் விசிறிகளை பயன்படுத்தினர். ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டது. 350 க்குக் மேற்பட்டவர்கள் கைது செய்யபட்டனர். ஏப்ரல் 1, 2022 அன்று, கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களின் சார்பாக 300 பேருக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மிரிகானை காவல்துறையில் இலவசமாக வழக்காட முன்வந்தனர்.

 அரசுக்கு எதிரான போராட்டத்தால் காலிமுகத்திடல்     மக்கள் வெள்ளத்தால் நிரம்பியது. சித்திரப் புத்தாண்டுடன் போராட்டக் காரர்கள் கலைந்து விடுவார்கள் என அரசாங்கம் தப்புக் கணக்குப் போட்டது.மே,ஜுன்,ஜூலை வரை  போராட்டம் தொடர்ந்தது.  அரசுக்கு எதிரான  போராட்டம் ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிராகத் திரும்பியது. ராஜபக்ஷ குடும்பத்தில் இருந்த ஜானாதிபதி,பிரதமர், அமைச்சர்கள் பதவி விலகினர்.  போராட்டத்தின்  வீரியத்தால்   அன்றைய ஜனாதிபதி கோத்தா நாட்டை விட்டு வெளியேறினார்.

அரசுக்கு எதிரான  போராட்டம்  உச்சக் கட்டத்தை அடைந்த போது ரணிலுக்கு குரு ச்ந்திர யோகம்  கிடைத்தது.  கீரிட்ட  இடத்தை நிரப்புவது போல  பிரதமரகிய ரணில்,  பின்னர் ஜனாதிபதியானார்.

  2000  ஆம் ஆண்டுகளின்  பிற்பகுதியில்   மத்திய கிழக்கு உட்பட உலகின் பல பகுதிகளில்  நடைபெற்ற  போராட்டங்கள் ஆட்சியை மாற்றின.   இலங்கையில் ஆட்சி மாற்றம் என்ற  பெயரில் ஜனாதிபதி ஆட்சியைக் கைப்பற்றினார். 

போராட்டங்களால் அரசியல் திருப்பு முனைகள் ஏற்பட்டுள்ளன.

 1953 இன் ஹர்த்தால் என்று அழைக்கப்பட்ட தொழிற்சங்கப் போராட்டம் இலங்கையில்  ஆளும் வர்க்கத்தை மையமாக உலுக்கியது.  விமுக்தி பெரமுனாவின் (ஜே.வி.பி) அரச அதிகாரத்தைக் கைப்பற்ற இரண்டு ஆயுதப் போராட்டங்களை  நடத்தியது . அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஒரு பயங்கரமான இன உள்நாட்டுப் போர் நடை பெற்றது. ஆனால், காலி முகத் திடலில் நடைபெற்றது  மக்கள் போராட்டம்.

இலங்கையில் உள் நாட்டுப் போர் நடை பெற்ற  போது  பொருளாதார நெருக்கடி ஏற்படவில்லை. போர முடிந்ததும் இலங்கையைக் கட்டி எழுப்புவதர்குரிய ஏர்படுகள் அவற்றையும் அரசாங்கம்  கொண்டுவரவில்லை.

 போருக்குப் பின்னரான நிலைமைகள் பொருளாதார அபிவிருத்தி மற்றும் அரசியல் நல்லிணக்கத்திற்கான அர்த்தமுள்ள இடங்களை வழங்கவில்லை. இருபத்தி இரண்டு மில்லியன் மக்களைக் கொண்ட  நாட்டை  நிர்வகித்த அரசியல்வாதிகள் மற்றும் உயரடுக்கினரின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள், இறுதியில் தீவை திவாலாக்கும் நிலைக்கு இட்டுச் சென்றன. இலங்கையானது கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையுடன் போராடியது, இது எரிபொருள், உணவு மற்றும் மருந்துகளின் அத்தியாவசிய இறக்குமதிகளை மட்டுப்படுத்தியுள்ளது, ஏழு தசாப்தங்களில் மோசமான நிதிக் கொந்தளிப்பில் மூழ்கியுள்ளது.

  2000  ஆம் ஆண்டுகளின்  பிற்பகுதியில்   மத்திய கிழக்கு உட்பட உலகின் பல பகுதிகளில்  நடைபெற்ற  போராட்டங்கள் ஆட்சியை மாற்றின.   இலங்கையில் ஆட்சி மாற்றம் என்ற  பெயரில் ஜனாதிபதி ஆட்சியைக் கைப்பற்றினார். 

போராட்டங்களால் அரசியல் திருப்பு முனைகள் ஏற்பட்டுள்ளன.

 1953 இன் ஹர்த்தால் என்று அழைக்கப்பட்ட தொழிற்சங்கப் போராட்டம் இலங்கையில்  ஆளும் வர்க்கத்தை மையமாக உலுக்கியது.  விமுக்தி பெரமுனாவின் (ஜே.வி.பி) அரச அதிகாரத்தைக் கைப்பற்ற இரண்டு ஆயுதப் போராட்டங்களை  நடத்தியது . அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஒரு பயங்கரமான இன உள்நாட்டுப் போர் நடை பெற்றது. ஆனால், காலி முகத் திடலில் நடைபெற்றது  மக்கள் போராட்டம்.

இலங்கையில் உள் நாட்டுப் போர் நடை பெற்ற  போது  பொருளாதார நெருக்கடி ஏற்படவில்லை. போர முடிந்ததும் இலங்கையைக் கட்டி எழுப்புவதர்குரிய ஏர்படுகள் அவற்றையும் அரசாங்கம்  கொண்டுவரவில்லை.

 போருக்குப் பின்னரான நிலைமைகள் பொருளாதார அபிவிருத்தி மற்றும் அரசியல் நல்லிணக்கத்திற்கான அர்த்தமுள்ள இடங்களை வழங்கவில்லை. இருபத்தி இரண்டு மில்லியன் மக்களைக் கொண்ட  நாட்டை  நிர்வகித்த அரசியல்வாதிகள் மற்றும் உயரடுக்கினரின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள், இறுதியில் தீவை திவாலாக்கும் நிலைக்கு இட்டுச் சென்றன. இலங்கையானது கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையுடன் போராடியது, இது எரிபொருள், உணவு மற்றும் மருந்துகளின் அத்தியாவசிய இறக்குமதிகளை மட்டுப்படுத்தியுள்ளது, ஏழு தசாப்தங்களில் மோசமான நிதிக் கொந்தளிப்பில் மூழ்கியுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க வேண்டியது ஜனாதிபதியின் பொறுப்பகும்.

No comments: