Monday, May 2, 2022

ருவிட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க்


 அதிக  உறுப்பினர்களைக் கொண்ட சமூக  ஊடகமான ருவிட்டரை  எலான் மஸ்க் வாங்கப்போகிறார் என்று பரபரப்பாகப் பேசபட்ட செய்தி கடைசியில் உண்மையாகிவிட்டது. ருவிட்டர் பரவை இன்று எலான் மஸ்கின்  வசமானது.

2006-ல் தொடங்கப்பட்ட முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரின் 100 சதவிகித பங்குகளை 44 பில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்கியுளார். எலான் மஸ்க். 54.20 டாலர் ஒரு பங்கின் விலையாக பங்குதாரர்களுக்கு கிடைக்கும். ஏப்ரல் 1 அன்று சந்தையில் விற்பனையான விலையை விட இது 38 சதவிகிதம் அதிகம்.

ருவிட்டரில் கருத்துச் சுதந்திரம்  இல்லை என்பது எலானின் குற்றச்சாட்டு.  அதிக முறை ஹேக் செய்யப்பட்ட கணக்குகளில் எலான் மஸ்க் ட்விட்டர் பக்கமும் அடக்கம். கொரோனா தொடர்பாக பதிவிட்ட போது அதனை ட்விட்டர் நீக்கியது. இப்படியாக ட்விட்டருக்கும் எலானுக்குமான உறவு பகையும் முரணும் சேர்ந்ததே. அவற்றையெல்லாம் ட்விட்டரை வாங்கி சரி செய்து கொள்வோம் என முடிவு செய்துவிட்டார் எலான். இந்த மாதத்தின் தொடக்கத்தில் ட்விட்டரின் 9.2 சதவீத பங்குகளை வாங்கிய எலான் மஸ்க்கை நிர்வாகக் குழுவுக்கு அழைத்தார் ருவிட்டரின் சிஇஓ பராக் அகர்வால். எலான் மறுத்துவிட்டார். ஆனால், இப்போது 100 சதவிகிதத்தை எலான் வாங்கியிருக்கும் நிலையில், நிலைமை தலைகீழ்.

இனி ருவிட்டரில் வர இருக்கும் மாற்றங்கள் குறித்து நெட்டிசன்கள் ஆர்வத்தோடு பதிவிட்டு வருகிறார்கள். ஏற்கெனவே சில பகுதிகள் மட்டும் ஓப்பன் சோர்ஸ் எனப்படும் எளிதாக அணுகக்கூடிய மென்பொருளாக இருக்கும் நிலையில் ட்விட்டர் இனி முழுக்கவே ஓப்பன் சோர்ஸாக மாறவுள்ளது. ஸ்பம்பொட்ச் எனப்படும் மூட்டை பூச்சிக்களை நசுக்குவதே எலானின் அடுத்த கடமையாக இருக்கப்போகிறது. உள்ளேயும் வெளியேயும் திறந்த புத்தகமாக 'கருத்துக்களைச் சுதந்திரமாக முன்வைப்பதற்கான களமாக', குறிப்பாக ட்வீட்டை எடிட் செய்யும் வசதியைக் கொண்டு வர இருக்கிறார் எலான்.

ருவிட்டரை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜாக் டார்ஸி, "ருவிட்டர் பொது உடமை ஆக இருப்பதே சரி. ஒருவர் உரிமை கொள்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. இருப்பினும் இன்றைக்கு ட்விட்டர் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு ஒற்றைத் தீர்வாக நான் பார்ப்பது எலானைதான். சமூக மனநிலையை முன்வைக்கும் அவரது மிஷனில் நான் நம்பிக்கை கொள்கிறேன்" என்று ட்விட் செய்துள்ளார்.

ருவிட்டர் நிறுவனத்தை வாங்குவதில் இருந்து எலான் மஸ்க்கை தடுக்கும் வகையில் அதன் போர்ட் உறுப்பினர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அதே போர்ட் உறுப்பினர்கள் தற்போது இறங்கி வந்து எலான் மஸ்க்கிடம் ருவிட்டர் நிறுவனத்தை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளனர்.  முதலில் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை படிப்படியாகத்தான் மஸ்க் உயர்த்தினார். முதலில் 5 சதவிகித பங்குகளை வைத்து இருந்தவர் அதன்பின் கடந்த சில தினங்களுக்கு முன் தனது பங்குகளை 9.2 என்ற அளவிற்கு உயர்த்தினார். இதன் மூலம் அந்த நிறுவனத்தில் அதிக பங்கு கொண்டு இருக்கும் தனி நபராக மஸ்க் உருவெடுத்தார். முன்னதாக இந்த நிறுவனத்தில் வான்கார்ட் குழு வைத்திருந்த 8.8 சதவிகித பங்குதான் அதிகபட்ச பங்காக இருந்தது. வான்கார்ட் குழு அதை மஸ்க் பின்னுக்கு தள்ளினார். முறைப்படி அதிக பங்கு வைத்திருந்த அவர் தனக்கு ருவிட்டர் நிறுவனத்தை வாங்கும் விருப்பம் இல்லை என்று முதலில் பங்குதாரர்கள் பைலிங்கில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதன்பின் போர்ட் உறுப்பினர்களின் குழுவில் இணைய மறுத்தார். இதற்கான அழைப்பை சிஇஓ பராக் அக்ரவால் விடுத்து இருந்தார். ஆனாலும் கூட போர்ட் உறுப்பினர்களின் குழுவில் அவர் இணையவில்லை.

  போர்ட் உறுப்பினர் குழுவில் இருந்தால் மஸ்க் 14.5 சதவிகித பங்குகளுக்கு மேல் வாங்க முடியாது. அதேபோல் இவர் குழுவில் சொல்லும் மாற்றங்களை மற்ற எல்லா உறுப்பினர்களும் ஏற்க வேண்டும். எனவே மஸ்க் சுதந்திரமாக ருவிட்டர் நிறுவனத்தில் மாற்றங்களை செய்ய முடியாது. இதனால் போர்டில் இணையாத எலான் மஸ்க் மொத்தமாக ருவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை எடுத்தார். முதலில் இதை வாங்கும் விருப்பம் இல்லை என்றவர் அதை வாங்கும் முடிவை எடுத்தார்.

 ருவிட்டர் நிறுவனத்தின் மொத்த மதிப்பில் கிட்டத்தட்ட 37 பில்லியன். இதை மொத்தமாக 44 பில்லியனுக்கு வாங்கும் ஆபரை மஸ்க் கொடுத்தார். இதை ருவிட்டர் நிறுவனம் ஏற்காத பட்சத்தில் தன்னிடம் பிளான் பி இருக்கிறது என்று எலான் மஸ்க் குறிப்பிட்டார். பிளான் பி இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த காஸ்டலியான யுத்தம் தொடங்கியது. மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதில் இருந்து தடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டன.ஏனென்றால் ருவிட்டரில் பெரும்பான்மை பங்குகளை மஸ்க்தான் வைத்து இருந்தார். இதனால் அதிக பங்குகளை வைத்திருக்கும் எலான் மஸ்க் போன்ற பங்குதாரர்களின் கோரிக்கைகளை ட்விட்டர் நிறுவனம் ஏற்க வேண்டும். ஒருவேளை மஸ்க் கொடுத்த ஆபரை ட்விட்டர் நிறுவனம் ஏற்காத பட்சத்தில் அது பங்கு ரீதியாக அந்த நிறுவனத்திற்கு சரிவை ஏற்படுத்தலாம்.

பங்குதாரர்கள் விருப்பத்திற்கு எதிராக போர்ட் செயல்படுவதாக கூறி போர்ட் கலைக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே மஸ்க்கை விட அதிக பங்குகளை வாங்க ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் முடிவு செய்தனர். மஸ்க்கை முந்தும் வகையில் தற்போது வான்கார்ட் குழு மீண்டும் பங்குகளை உயர்த்தியது. வான்கார்ட் நிறுவனம் தனது மொத்த பங்குகளை 10 சதவிகிதமாக உயர்த்தியது. அதோடு ருவிட்டர் நிறுவனம் பாய்சன் பில் எனப்படும் விஷ மாத்திரையை சாப்பிட்டது. பாய்சன் பில் அதாவது மேலே படித்தோமே எதிரி நாட்டிடம் சிக்காமல் இருக்க வீரர்கள் விஷ மாத்திரையை சாப்பிடுவது போல ட்விட்டர் நிறுவனம் மஸ்க்கிடம் சிக்காமல் இருக்க விஷ மாத்திரையை சாப்பிட்டது. அதாவது ட்விட்டர் நிறுவனம் புதிதாக சில பங்குகளை உருவாக்கி அதை விற்பனை செய்தது. இந்த பங்குகளை அதன் மற்ற பங்குதாரர்கள் குறைந்த விலைக்கு வாங்க முடியும். ஆனால் மஸ்க் வாங்க முடியாது. விஷ மாதிரி என்றால் என்ன? மற்ற பங்குதாரர்கள் இந்த பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கினால்.. அதை வாங்கிய பின் அதன் உண்மையான மதிப்பு அதிகமாக இருக்கும். இதனால் புதிய பங்குகளை பல பங்குதாரர்கள் ஆர்வமாக வாங்குவார்கள்.  இப்படி புதிய பங்குகள் வேறு பங்குதாரர்களுக்கு விற்கப்படும் நிலையில், தானாக மஸ்க் வைத்து இருக்கும் பங்கு மதிப்புகள் சரிவை சந்திக்கும். இதை கார்ப்ரேட் உலகில் பாய்சன் பில் என்பார்கள். அதாவது ஒரு நிறுவனத்தை கைப்பற்ற முயலும் நபரை தடுக்கும் வகையில் மற்ற பங்குதாரர்களுக்கு கூடுதல் பங்குகளை விற்கும் யுக்தி. ருட்விட்டர் நிறுவன போர்ட் உறுப்பினர்கள் பின்னர் தானாக முன் வந்து மஸ்க் ஆபரை ஏற்றுக்கொண்டனர் ருவிட்டரில் இருக்கும் குறைபாடுகளைக் களைந்துபுதிய ருவிட்டரை உருவாக்கப்போவதகத் தெரிவித்துள்ள எலான் மஸ்க்  என்ன செய்யபோகிறார் அன்பதை அறிய உலகம் ஆவலாக  இருக்கிறது.

No comments: