Sunday, June 12, 2022

இலங்கை கப்டன் தசுன் சனக உலகசாததை ,சாதனை


  அவுஸ்திரேலியகிறிக்கெற்  அணி இலங்கையில்  3 ரி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது.   3 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் நடைபெற்றது. ஐசிசி ரி20 உலககோப்பை 2021 தொடரை வென்று சம்பியனாக இருக்கும் அவுஸ்திரேலியா ஜூன் 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் கொழும்பில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் வென்று 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியது.   கடைசிப்  போட்டி ஜூன் 11 ஆம் திகதி  பல்லேலவயில் நடைபெற்றது. 17 ஆவது ஒவர்வரை தோல்வியி என்றிருந்த்ந் இலங்கை அணியை கப்டன் சனக உலகசாதனையுடன்  வெற்றி பெற வைத்தார்.

நானயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 176/5 ஓட்டங்களை குவித்தது. 176 என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இலங்கை 13.5 ஓவர்களில் 98/5 என திணறியது. எதிர்பார்த்த  ஹசரங்க 8 (7) ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால்  தோல்வி உறுதி என்று ரசிகர்கள்  நினைத்தனர்.

மத்திய வரிசையில்  களமிறங்கிய இலங்கை அணி கப்டன் தசுன் சனக மனம் தளராமல் வெற்றிக்காக போராடினார். ஆனாலும் எதிர்ப்புறம் வந்த வீரர்கள்  திணறியதால் கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 59 ஓட்டங்கள் தேவை என்ற நிலை உருவானது. ஓவருக்கு 20 ஓட்டங்கள் தேவை. கப்டன் சானக 6* (12) என திணறி கொண்டிருந்ததால் இலங்கை மூன்றாவது தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

சிறந்த பந்து வீச்சாளரான ஜோஸ் ஹேசல்வுட் வீசிய 18-வது ஓவரில் அந்நியனாக மாறிய அவர் 6, 6, 4, 4 என மிரட்டலான பவுண்டரிகளை பறக்கவிட்டு மொத்தம் 21 ஓட்டங்கள் சேர்த்தார். 18-வது ஓவரிலும் 10 ஓட்டங்களை விளாசி  அவுஸ்திரேலியாவைத் திணறடித்தார்.   கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது அதை வீசிய ரிச்சர்ட்சன் 2 வைட் உட்பட முதல் 2 பந்துகளில் 3 ஓட்டங்கலை மட்டுமே கொடுத்தார். இடையில் கருணரத்னே 14* (10) ஓட்டங்கள் எடுக்க கடைசி 4 பந்துகளில் வெற்றிக்கு 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது 4, 6, 6 என சிக்சர்களை பறக்கவிட்ட சனகவின் ஆட்டம் கிலியை ஏற்படுத்தியது.   அரண்டு   ரிச்சர்ட்சன் விசிய ஐந்தாவது பந்தும் வைட்  என அரிவிக்கப்பட்டதால் 1 பந்து மீதம் வைத்த இலங்கை 19.5 ஓவரில் 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.

ரி20 கிறிக்கெற்  வரலாற்றில் இது ஒரு மிகச்சிறந்த போட்டியாக அமைந்தது.  கடைசி 3 ஓவர்களில் 59 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது அதை வெற்றிகரமாக எட்டிப்பிடித்த இலங்கை சர்வதேசம் மற்றும் ஒட்டுமொத்த ரி20 கிறிக்கெற்  வரலாற்றில் கடைசி 3 ஓவரில் அதிக ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்ற அணி என்ற புதிய நம்பமுடியாத உலக சாதனை படைத்தது.

  1. இலங்கை : 59 ஓட்டங்கள், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக, 2022*

2. சிட்னி சிக்ஸர்ஸ் : 56 ஓட்டங்கள், சிட்னி தண்டர்ஸ்க்கு எதிராக, பிபிஎல், 2015

 சர்வதேச ரி20 கிறிக்கெற் வரலாற்றில் சேசிங் செய்யும் போது கடைசி 3 ஓவர்களில் 50 ஓட்டங்கள் எடுத்த முதல் துடுப்பாட்ட வீரர் என்ற புதிய உலக சாதனையை அவர் படைத்தார்.

  1. 50 – தசுன் சனக, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக, 2022*

2 46 – இசுறு உடான, தென்னாபிரிக்காவுக்கு எதிராக, 2019

3. 45 – மைக் ஹசி, பாகிஸ்தானுக்கு எதிராக, 2010

 

No comments: