Monday, June 20, 2022

விராட் கோலி-பாபர் அசாம் ஒரே அணியில்?

ஆஃப்ரோ-ஆசியக் கிண்ண  கிரிக்கெட்டை மீண்டும் நடத்த முடிவெடுக்கப்படலாம் என்று தெரிகிறது. அப்படி நடந்தால் இந்தியாவின் சிறந்த வீரர்களும் பாகிஸ்தானின் சிறந்த வீரர்களும் ஒரே அணியில் ஆடுவார்கள். அப்படி ஆஃப்ரோ ஆசியக்  கிண்ணம் புத்துயிர் பெற்றால் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ஷமியுடன் பாபர் அசாம், ரிஸ்வான், ஷாஹின் அப்ஃரீடி ஆகியோர் ஒரே ஓய்வறையைப் பகிர்ந்து கொள்வார்கள். கடசியாக 2007 ஆம் ஆன்டு நடைபெற்றது.

2023-ல் ஆப்ரோ ஆசியக் கோப்பை கிரிக்கெட் நடக்கலாம் என்று தெரிகிறது. 2005-ல் ஆப்ரோ ஆசியக் கோப்பை நடைபெற்றது. முதல் முறை 3 ஒருநாள் போட்டி, பிற்கு 2007-ல் நடந்த ஆஃப்ரோ ஆசியக் கிண்ணப் போட்டியில்   ஒரு ரி20யும் சேர்க்கப்பட்டது. 

2005 தொடரில் சேவாக், ஷாஹித் அஃப்ரீடி ஓப்பனிங் இறங்கியதும் பந்திவீச்சில்  ஷோயப் அக்தர் ஒரு முனையிலும் சகீர் கான் இன்னொரு முனையில் வீசியதும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் 1௧ என்று சமன் ஆனது, சகீர் கான் 3 போட்டிகளிலும் அற்புதமாக வீசினார். 2005-ல் இன்சமாம் ஆசிய லெவனுக்கு கப்டனாக இருந்தார், அங்கு ஷான் போலாக் இருந்தார்.

2007-ல் மகேல ஜெயவர்தபன‌  ஆசிய லெவனுக்கும், ஜஸ்டின் கெம்ப் ஆப்பிரிக்க லெவனுக்கும் கப்டனாக இருந்தனர். 2007- தொடரில் 3 போட்டிகளிலும் ஆசியா லெவன் வென்றது. இதில் 3வது போட்டியில் கப்டன் மகேல ஜெயவர்தன‌ 106 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 107 ஓட்டங்கள் எடுக்க,எம்.எஸ்.டீனி 81 பந்துகளில் சதம் கண்டு 97 பந்துகளில் 139 ஓட்டங்களை 15 பவுண்டரி 5 சிக்சர்களுடன் விளாசினார், இது சென்னையில் நடந்தது. ஆசிய லெவன் 331 ஓட்ட்ங்கள் குவிக்க ஆப்பிரிக்கா லெவன் 318/7 வரை வந்து தோல்வி கண்டது. தொடரை ஆசிய லெவன் 3-0 என்று கைப்பற்றியது.

இந்நிலையில் ஆப்ரோ-ஆசியக் கோப்பை மீண்டும் புத்துயிர் பெற்றால் ஸ்டார்கள் மீண்டும் ஒன்றிணையும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் ஆசிய லெவனுக்குக் கேப்டன் பாபர் அசாமா, விராட் கோலியா அல்லது ரோஹித் சர்மாவா? 

No comments: