Wednesday, October 12, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 37

தமிழ் சினிமா வரலாற்றில் 1980 களில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. கதாநாயகனையும், கதாநாயகியையும் விட அதிகமான ரசிகர்கள் சில்க்ஸ்மிதாவை ஆராதித்தனர். அவரின்  பெயரைச்  சொன்னாலே  இனம் புரியாத கிளர்ச்சி ஏற்படும்.

1980-களின் துவக்கத்தில் தமிழ் சினிமா தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக உருவெடுத்தார் ஸ்மிதா.1983-ல் சில்க் ஸ்மிதாவின் பெயரால் நாடெங்கும் ரசிகர் மன்றங்கள் தோன்றின. மதுரையில் அவர் பெயராலே மன்றத்தைத் துவங்கிய ஒரு ரசிகர் கூட்டம் சில்க் ஸ்மிதாவின்  மன்றத்துக்கென தனிக் கொடியை பற்றக்கவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.தமிழ்ப் படங்களைப் போலவே தமிழ்ப் பத்திரிகைகளும் ஸ்மிதாவின் படத்தைப் போடாமல் பத்திரிகையை நடத்த முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டன.“வாசகர்களுக்கு நான்கு வாரங்களில் சில்க் ஸ்மிதா தெலுங்கு கற்றுத் தரப் போவதாக” ஒரு  விளம்பரத்தை  பத்திரிகை ஒன்று வெளியிட்டது என்றால் சில்க் ஸ்மிதாவின் தாக்கம் எத்தகையது என அறியலாம்.

  பாக்யராஜ் கதாநாயகனாக அறிமுகமானபுதிய வார்ப்புகள்படத்தில் பூக்காரி ஒருவரின் பாத்திரத்தில்  நடிப்பதற்காக பாரதிராஜாவைப்  பார்க்கச் சென்றார்  அவர். ஆனால், அந்தப் படத்தில் அவர் தேர்வாகவில்லை. பின்னர் அவர் நடிக்கவிருந்த அந்தப் பாத்திரத்தில் சதிஸ்ரீ என்னும் நடிகை நடித்தார்.

இந்தியாவின் ஆந்திரமாநிலம் ஏலூரு என்ற இடத்தில் பிறந்தவர் விஜயலட்சுமி. பிறப்பால் ஆந்திரமாநிலத்தை சேர்ந்தவராயினும் இவரது பூர்வீகம் தமிழ் நாட்டின் கரூர் ஆகும். இவர் வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை நான்காம் வகுப்போடு நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. இவரது வசீகர தோற்றத்தின் காரணமாக பலரது தொல்லைகளுக்கு ஆளானார். இதனால் இவரது குடும்பத்தார் இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் முடித்துவைத்தனர். இவரது குடும்பவாழ்க்கையில் ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக இவர் சென்னைக்கு பிழைப்பு தேடியும் புது வாழ்க்கை தேடியும் ஓடிவந்து இவரது உறவினர் வீட்டில் தங்கினார்.

இவர் தனது திரைத்துறை வாழ்க்கையை இரண்டாம் நிலை நடிக நடிகைகளுக்கான ஒப்பனை கலைஞராக தொடங்கினார். பின் தமிழ் நடிகரும் இயக்குனருமான வினுச்சக்ரவர்த்தியின் மூலம் வண்டிச்சக்கரம் என்கிற ஒரு தமிழ் திரைப்படத்தில் சில்க் என்கிற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தில் இவரை ஸ்மிதா என்கிற புது புனைப்பெயரில் அறிமுகப்படுத்தினார். வினுச்சக்கரவர்த்தியின் மனைவி சில்கிற்கு ஆங்கிலம் பயிற்றுவித்தார். அதே நேரத்தில் சில்க் வேறு ஒருவரிடம் நடனமும் கற்றுகொண்டார். வண்டிச்சக்கரத்தில் நடித்தபின்பு இவரது கதாபாத்திரமான சில்க் என்கிற பெயரும் ஸ்மிதா என்கிற பெயரும் இணைந்து இவரது அடையாளம் ஆயின.

வண்டிச் சக்கரம்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜாவிடமிருந்து சில்க் ஸ்மிதாவிற்கு அழைப்பு வந்தது. “இந்த முறையாவது அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும்என்று எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு அவரைப் பார்க்கக் கிளம்பினார் ஸ்மிதா.இந்த முறை சில்க் ஸ்மிதாவின் வேண்டுதல் வீணாகவில்லை. ‘அலைகள் ஓய்வதில்லைபடத்தில் நடிக்க ஸ்மிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.சினிமாவில் எந்த மாதிரியான பாத்திரத்தில் நடித்து  பெயர் வாங்க வேண்டும் என்று ஸ்மிதா ஆசைப்பட்டாரோ அப்படிப்பட்ட  ஒரு பாத்திரத்தை அந்தப் படத்தில் ஸ்மிதாவிற்கு வழங்கினார் பாரதிராஜா.

 சில்க் ஸ்மிதாவின் நடிபுப் பசிக்கு  தீனிபோட்ட அதே போன்று  இன்னொரு பாத்திரம் அவருக்குக் கிடைக்காதது துரதிர்ஷ்டமே.மிதா அந்தப் படத்தில் ஏற்றிருந்த பாத்திரத்தில் அவரிடமிருந்து முழுமையான நடிப்பை வரவழைக்க வேண்டும் என்பதற்காக பல முறை ஸ்மிதாவை அறைந்திருக்கிறார் பாரதிராஜா. ஆனால், அந்த அடிகளில் ஒரு அடிகூட ஸ்மிதாவுக்கு வலிக்கவில்லை. அதற்குக் காரணம்வண்டிச் சக்கரம்படத்தில் கவர்ச்சிக் குளத்தில் நீந்திய அவருக்குஅலைகள் ஓய்வதில்லைபடத்தில் அவர் வழங்கியிருந்த குணச்சித்திர பாத்திரம்.‘அலைகள் ஓய்வதில்லைபடத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே அந்தப் படத்தைத் தெலுங்கிலே தயாரிப்பதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன. ‘சீதா கோக சிலகாஎன்ற பெயரில் அந்தப் படத்தைத் தெலுங்கிலே தயாரித்தவர்சங்கராபரணம்படைத்தைத் தயாரித்த ஏடித,நாகேஸ்வரராவ் என்னும் தெலுங்குப் படத் தயாரிப்பாளர்.

அலைகள் ஓய்வதில்லைபடத்தின் தெலுங்குப் பதிப்பில் ராதா நடித்த பாத்திரத்தில்கல்லுக்குள் ஈரம்படத்தில் நாயகியாக நடித்த அருணா நடித்தார். தியாகராஜனின் பாத்திரத்தில் சரத்பாபு நடித்தார். ஆனால், தமிழில் சில்க் ஸ்மிதா ஏற்றிருந்த பாத்திரத்தில் மட்டும் தெலுங்கிலும் அவரையே நடிக்க வைத்தார் பாரதிராஜா.“தியாகராஜனின் மனைவியாக வந்து காதலர்களை சேர்த்து வைக்க முயற்சித்து அதற்காக தியாகராஜனிடம் அடி வாங்குவதற்கு முன் அவரை ஒரு பார்வை பார்ப்பாரே அது தியாகராஜனுக்கு மட்டுமா..? அல்லது ஒட்டு மொத்த ஆண் சமுதாயத்திற்கும் சேர்த்தா.. என்பது அவர் மனதுக்கே வெளிச்சம். எவ்வளவு அருமையான நடிகையை இழந்துவிட்டோம்?” என்று அந்தப் படத்தில் ஸ்மிதா நடித்திருந்த நடிப்பைப் போற்றி வலைத்தளத்தில் தனது விமர்சனத்தைப் பதிவு செய்திருக்கிறார் ஒரு ரசிகர். 

சில்க் ஸ்மிதாவின் மீது கவர்ச்சி நடிகை என்ற முத்திரையை அழுத்தமாகப் பதித்ததில்மூன்றாம் பிறைபடத்திற்குப்  பெரும் பங்கு உண்டு.‘பொன்மேனி உருகுதேஎன்ற பாடலுக்கு அவர் ஆடியிருந்ததைப் பார்ப்பதற்காகவே திரும்பத் திரும்ப பல ரசிகர்கள் அந்தப் படத்தைப் பார்க்க வந்தனர். இளைஞர்கள் பலரது இரவுத் தூக்கத்தை கெடுக்கத் தொடங்கினார் ஸ்மிதா.“உடம்பு இருக்கட்டும். வெறும் கண்களாலேயே போதை ஏற்றுவதில் சிலுக்கிற்கு நிகர் சிலுக்குத்தான்..” என்று ஸ்மிதாவை ஆராதித்ததுகுமுதம்த்திரிகை.

மூன்றாம் பிறைபடத்தைப் பார்க்க தியேட்டர்களுக்குப் போன ஸ்மிதா கமல்ஹாசனுடன் சேர்ந்து தான் ஆடியிருந்தபொன்மேனி உருகுதே’  பாடலுக்குக்  கிடைத்த வரவேற்பைப் பார்த்து அதிர்ந்து போனார்.இனி எந்தப் பாதையில் அவர் பயணிக்க வேண்டும் என்பதைமூன்றாம் பிறைஅவருக்கு எடுத்துச் சொன்னது என்றால் அவர் எடுத்த முடிவு சரியானதுதான் ஆமோதித்ததுசகலகலாவல்லவன்பட வெற்றி.

அந்தப் படத்தில் இடம் பெற்றநேத்து ராத்திரி அம்மாபாடலை எஸ்.ஜானகி பாடியிருந்த விதம், அதற்கு புலியூர் சரோஜா அமைத்திருந்த நடனம்அந்த நடனத்தின்போது ஸ்மிதா காட்டிய அங்க அசைவுகள் எல்லாமாகச் சேர்ந்து அந்தப் பாடல் காட்சி பலரது தூக்கத்தை காவு வாங்கியது.நான்கு நாட்கள் படமாக்கப்பட்ட அந்த பாடல் காட்சியின்போது  ஸ்மிதா சரியாக நடனமாடாததால் நடன இயக்குநரான புலியூர் சரோஜா  ஸ்மிதாவைத் திட்டிய திட்டுகளுக்கு அளவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அதனாலெல்லாம் புலியூர் சரோஜா மீது ஒரு இம்மியள விற்குக்கூட அவர் மீது ஸ்மிதா கோபம் கொள்ளவில்லை. தியேட்டரில் ரசிகர்கள் தன்னுடைய நடனத்தைப் பார்த்து கை தட்ட அந்தத்  திட்டுக்கள்தான் உரமாக அமையப் போகிறது என்பதை ஸ்மிதா மிகச் சரியாக உணர்ந்திருந்தார்.‘சகலகலாவல்லவன்வெளியான முதல் நாளன்றே திரையுலகில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.வசூலில் புதிய சரித்திரம் படைத்த அந்தப் படத்தின் மாபெரும் வெற்றியில் சில்க் ஸ்மிதா பங்கேற்றநேத்து ராத்திரி அம்மாஎன்ற பாடலுக்கும் அந்தப் பாடலுக்கு ஸ்மிதா ஆடிய ஆட்டத்திற்கும் முக்கிய பங்கு இருந்தது.

சில்க்கின்  வெற்றி ஒரு புறம்  இருக்க அவரைப்பாற்றிய எதிர்  மறையான  செய்திகளும் வெளிவந்தன. தலைக்கனம் பிடித்தவர்,   பெரிய நடிகர்களுக்கு மரியாதை கொடுக்காதவர்  போன்ற செய்திகள்  ரெக்கை கட்டிப் பறந்தன.

அப்படிப்பட்ட செய்திகள் உங்களைப் பாதிக்கவில்லையா..?” என்று ஒரு பத்திரிகை நிருபர் கேட்டபோது ஆத்திரப்படாமல் அவருக்கு அமைதியாக பதில் சொன்னார் சில்க்.

நான் நடிக்க வந்து இன்னும் நான்கு வருடங்கள்கூட முழுதாக முடியவில்லை. அதற்குள் தமிழில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், தெலுங்கில் சிரஞ்சீவி, சோபன்பாபு, கிருஷ்ணா, மலையாளத்தில் மது என்று தென்னிந்தியாவில் உள்ள எல்லா முன்னணிக் கதாநாயகர்களின் படங்களிலும் நான் நடித்துவிட்டேன்.நான்கு வருடங்களில் இருநூறு படங்களில் நான் நடித்து விட்டதைத் தாங்கிக் கொள்ள முடியாத சிலர் பரப்பி வரும் வதந்திகள்தான் அந்தச் செய்திகள். அந்தச்  செய்திகளைப் படிக்கவோ.. அல்லது அதை நினைத்து வருந்தவோ நேரமில்லாமல் இப்போது நான் ஓடிக் கொண்டிருக்கிறேன்என்று ஸ்மிதா பதில் கூறியபோது மனதளவில் அவருக்குள் ஒரு முதிர்ச்சி  வந்துவிட்டிருந்ததை அந்த  நிருபரால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது.

 

No comments: