Wednesday, October 26, 2022

மழையால் இங்கிலாந்தை வென்றது அயர்லாந்து


 மெல்போர்னில் இன்று நடந்த போட்டியில்  குரூப்1 பிரிவில் உள்ள இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின மழையால் 45 நிமிட நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது. ஆனால் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. இங்கிலாந்து கப்டன் ஜாஸ்பட்லர் நாணயச் சுழற்சியில் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அயர்லாந்து கப்டன் பல் பிரீனும், பால் ஸ்டிர்லிங்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் ஓவரில் அயர்லாந்து அணியால் 3 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 2-வது ஓவர் வீசப்பட்ட போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 9 பந்துகள் வீசப்பட்ட நிலையில் மழையால் ஆட்டம் மீண்டும் தடைபட்டது. மழை விட்டதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

 இங்கிலாந்து வீரர்கள் பந்து வீச்சு நேர்த்தியாக இருந்தது. கப்டன் பல்பிரீன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை சேர்த்தார். அயர்லாந்து அணி 19.2 ஓவரில் சகல விக்கெற்களையும் இழந்து  157    ஓட்டங்கள் எடுத்தது.  பால்பிரீன் அதிகபட்சமாக 47 பந்தில் 62 ஓட்டங்களும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), டக்கர் 27 பந்தில் 34 ஓட்டங்களும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்ர். இங்கிலாந்து தரப்பில் மார்க்வுட், லிவ்விங்ஸ்டோன்  ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், , சாம்கரண் 2 விக்கெட்களையும் ,பென்ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டையும்  கைப்பற்றினர்.

 158 ஓட்டங்கள் என்ற  இலக்குடன்  இங்கிலாந்து ஆடியது. க்ச்ப்டனும், தொடக்க வீரருமான பட்லர் முதல் ஓவரில் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஓட்டங்கள் எடுத்தது.   மொய்ன் அலியுடன்    லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தார். மொய்ன் அலி அதிரடியாக விளையாடி 12 பந்தில் 24 ஓட்டங்கள் குவித்து களத்தில் இருந்தார். அப்போது மழை குறுக்கிட்டது. இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதனால் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி அயர்லாந்து 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 


No comments: