ஜென்னி
பிண்டன், தன் மகன் டைலர் உலகக்கிண்ணப் போட்டியில் அறிமுகமாகிறார் என்பதை முழுமையாக
உணரவில்லை. 21 வயதான நியூசிலாந்து தடுப்பாட்ட வீரரான அவர், ஈரானுக்கு எதிரான தொடக்க
ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் களமிறங்கினார். ஆனால், ஆட்டம் 2-2 என்ற சமநிலையில் இருந்தபோது,
முடிவைப் பற்றிய பிண்டனின் கவலை அவரது உற்சாகத்தை அடக்கியது.
ஈரானுக்கு
எதிரான ஆட்டத்தில் டைலர் பங்கேற்றதன் மூலம், உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய முதல் தாய்-மகன் ஜோடி
என்ற பெருமையை அவர்கள் பெற்றனர்.
பத்து
ஆண்டுகள் நீடித்த தனது விளையாட்டு வாழ்க்கையில், முன்னாள் கோல்கீப்பரான இவர் நியூசிலாந்து
மகளிர் அணிக்காக 77 முறை களமிறங்கியுள்ளார். அவர் 2007 ,2011 ஆண்டுகளில் மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகளிலும்,
2008 , 2012 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
பிண்டன்
தற்போது நியூசிலாந்து மகளிர் அணியின் உதவிப் பயிற்சியாளராக உள்ளார். இதற்கு முன்பு
அவர் ஆர்சனல், ரீடிங் , லண்டன் சிட்டி லயனஸ் அணிகளில் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.
ஆனால்
எல்லாவற்றிற்கும் மேலாக, பிண்டன் ஒரு தாயாக இருக்க முயற்சிக்கிறார். அவர் தனது கணவரும்,
நியூசிலாந்தின் முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரருமான கிராண்ட் பிண்டனுடன், டைலர்
, அணிக்கு ஆதரவளிப்பதற்காக உலகக் கோப்பைக்காக
வட அமெரிக்காவில் இருக்கிறார். அவரது அணி சார்ந்த கடமைகள் காரணமாக அவர்களால் அடிக்கடி
சந்திக்க முடிவதில்லை, ஆனால் அவர்கள் சந்திக்கும் சமயங்களில், அவரை அணைத்துக்கொள்ளக்
கிடைக்கும் தருணங்களைப் பற்றி பிண்டன் அன்புடன் பேசுகிறார்.

No comments:
Post a Comment