Monday, June 29, 2026

உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய தாய்-மகன்

ஜென்னி பிண்டன், தன் மகன் டைலர் உலகக்கிண்ணப் போட்டியில் அறிமுகமாகிறார் என்பதை முழுமையாக உணரவில்லை. 21 வயதான நியூசிலாந்து தடுப்பாட்ட வீரரான அவர், ஈரானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் களமிறங்கினார். ஆனால், ஆட்டம் 2-2 என்ற சமநிலையில் இருந்தபோது, முடிவைப் பற்றிய பிண்டனின் கவலை அவரது உற்சாகத்தை அடக்கியது. 

ஈரானுக்கு எதிரான ஆட்டத்தில் டைலர் பங்கேற்றதன் மூலம், உலகக்  கிண்ணப் போட்டியில் விளையாடிய முதல் தாய்-மகன் ஜோடி என்ற பெருமையை அவர்கள் பெற்றனர். 

பத்து ஆண்டுகள் நீடித்த தனது விளையாட்டு வாழ்க்கையில், முன்னாள் கோல்கீப்பரான இவர் நியூசிலாந்து மகளிர் அணிக்காக 77 முறை களமிறங்கியுள்ளார். அவர் 2007 ,2011  ஆண்டுகளில் மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகளிலும், 2008  , 2012 ஆண்டுகளில்  ஒலிம்பிக் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

பிண்டன் தற்போது நியூசிலாந்து மகளிர் அணியின் உதவிப் பயிற்சியாளராக உள்ளார். இதற்கு முன்பு அவர் ஆர்சனல், ரீடிங் , லண்டன் சிட்டி லயனஸ் அணிகளில் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். 

ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, பிண்டன் ஒரு தாயாக இருக்க முயற்சிக்கிறார். அவர் தனது கணவரும், நியூசிலாந்தின் முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரருமான கிராண்ட் பிண்டனுடன், டைலர் ,  அணிக்கு ஆதரவளிப்பதற்காக உலகக் கோப்பைக்காக வட அமெரிக்காவில் இருக்கிறார். அவரது அணி சார்ந்த கடமைகள் காரணமாக அவர்களால் அடிக்கடி சந்திக்க முடிவதில்லை, ஆனால் அவர்கள் சந்திக்கும் சமயங்களில், அவரை அணைத்துக்கொள்ளக் கிடைக்கும் தருணங்களைப் பற்றி பிண்டன் அன்புடன் பேசுகிறார்.

 

  

No comments: