Friday, June 26, 2026

மொராக்கோவை எதிர் கொள்கிறது நெதர்லாந்து


 மிசௌரியின் கேன்சஸ் சிட்டியில் துனிசியாவை எதிர்த்து விளையாடிய  நெதர்லாந்து   3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரூப் F-ல் முதலிடம் பிடித்தது

உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் தோல்வியடைந்த பிறகு தனது பயிற்சியாளரை நீக்கிய துனிசியா, ஏற்கெனவே போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தது.

இரண்டாவது நிமிடத்தில், கப்டன் எல்லிஸ் ஸ்கிரியின் கவனக்குறைவான கிளியரன்ஸ் பந்து தங்களது சொந்த கோலுக்குள் சென்றது.   ஏழாவது நிமிடத்தில் ப்ராப்பி 2-0 என கோல் கணக்கை உயர்த்தினார். பிரையன் ப்ராப்பி உலகக்  கிண்ணத்தில் தனது மூன்றாவது கோலை அடித்தார் இரண்டாம் பாதியில் ஹஸெம் மஸ்தூரியின் கோல் மூலம் துனிசியா மீண்டு வந்த பிறகு, ஒரு கோனரிலிருந்து வந்த பந்தை ஜான் பால் வான் ஹெக்கே தலையால் முட்டிய பந்து, அனிஸ் ஸ்லிமானின் மீது பட்டு துனிசிய வலைக்குள் செல்ல, கோல் கணக்கு 3-1 ஆனது.

நொக் அவுட் சுற்றில்  30 ஆம் திகதி மொராக்கோவை எதிர்த்து விளையாடுகிறது. நெதர்லாந்து. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி,  காலிறுதியில் தென் ஆபிரிக்கா அல்லது கனடாவை எதிர்கொள்ளும்.

  

No comments: