Monday, September 27, 2021

அன்று ஷேன் வட்சன் இன்று டூபிளெஸ்ஸிஸ்

   14வது ஐபிஎல் தொடரின் 38-ஆவது லீக் போட்டி  கொல்கட்டாவுக்கு எதிராக  அபுதாபியில் நடைபெற்ற போது  டூபிளெஸ்ஸிஸ், இரத்தக் காயத்துடன் களத்தடுப்பு செய்து செய்து பின்னர் துடுப்பெடுத்தாடினார்.

 கொல்கட்டா முதலில் துடுப்பெடுத்தாடிய போது  டூபிளெஸ்ஸிஸ்  தனது இடது காலின் முட்டிக்கு மேல் அடிபட்டு இரத்தம் வழிந்த நிலையில்  வெளியேறாது களத் தடுப்பு செய்தார்.தனது இடது காலின் முட்டிக்கு மேல் அடிபட்டு ரத்தம் வழிந்த நிலையில் பீல்டிங் செய்தார்.

அந்த இரத்த காயத்துடன் துடுப்பெடுத்தாடிய  அவர் 30 பந்துகளில் 43 ஓட்டங்கள் குவித்து சிறப்பான துவக்கத்தையும் கொடுத்திருந்தார்.    இறுதியில் சென்னை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டூபிளெஸ்ஸிஸ்ன் இந்த அர்ப்பணிப்பு தற்போது ரசிகர்களின் மனதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது

இதேபோன்று 2018 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஷேன் வாட்சன் ரத்த காயத்துடன் விளையாடியது ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்தது.


 

 

No comments: