Thursday, September 30, 2021

ஐபிஎல்லில் விளையாடாமல் வெளியேறிய அர்ஜுன் டெண்டுல்கர்

மும்பை அணியின் வீரர்களில் ஒருவரான அர்ஜுன் டெண்டுல்கர் காயம் காரண‌மாக அணியில் இருந்து  வெளியேறியுள்ளார். ஐபிஎல் ஏலத்தின் போது அனைவரும் எதிர்பார்த்தது போல டெண்டுல்கரின் மகனான அர்ஜுனை மும்பை அணி வாங்கியது. இளம் வீரரான அர்ஜுன் டெண்டுல்கர் முதல்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்ததாதல், அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது   ஆனால், விளையாடும் அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் இடம் பெறவில்லை.

 இந்நிலையில், காயம் காரணமாக அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியில் இருந்து விலகியுள்ளதாகவும் அவருக்குப் பதில் மாற்று வீரராக சிமர்ஜீத் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார். சிமர்ஜீத் சிங் இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "காயம் ஏற்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரில் இருந்து அர்ஜுன் டெண்டுல்கர் விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக சிமர்ஜீத் சிங் அணியில் சேர்க்கப்படுகிறார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான சிமர்ஜீத் சிங் ஐபிஎல் வழிகாட்டுதல்களின்படி கட்டாய தனிமைப்படுத்தும் காலத்திற்குப் பின்னர், மும்பை அணியுடன் பயிற்சியைத் தொடங்குவார்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிமர்ஜீத் சிங் டெல்லியை சேர்ந்த 23 வயதான சிமர்ஜீத் சிங் ஐபிஎல் தொடரில் ஆடுவது இதுவே முதல்முறையாகும். 

No comments: