Monday, November 20, 2023

சட்டத்தை நம்பி ஏமாந்த பன்னீர்ச்செல்வம்

பன்னீர்ச்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும்  இரட்டைத் தலைமையுடன்  கட்சியில் கோலோச்சும் வரை எந்தப் பாதிப்பும் இருக்கவில்லை. அதிகாரம்,பதவி,செல்வாக்கு என்பனவற்றை எடப்பாடி   தனியாக அனுபவிக்க் முர்பட்டபோது  பிரச்சனை வெளியே தெரிய ஆரம்பித்தது. தனக்கான  ஒரு அணியை கட்சிக்குள் உருவாக்கி பலமான எடப்பாடி பன்னீர்ச்செல்வம்  ஓ.பன்னீர்ச்செல்வத்தை வெளியேற்றினார். 

பன்னீரை எடப்பாடி வெளியேற்றிய முறை  மிகவும் தவறானது. நம்பிக்கைத் துரோகம் என்பது வெளிப்படையான  உண்மை. கட்சிக்கொடி சின்னம் அனைத்தும்  பன்னீர்ச்செல்வத்திடம்  இருந்தது. எடப்பாடியின் ஆசை வார்த்தையும்,   மோடி, அமித்ஷா ஆகியோரின் அழுத்தமும் எடப்பாடியின் பக்கம்  பன்னீரைத் தள்ளியது. கட்சியில் இருந்து வெளியேற்றப் பட்டதை எதிர்த்து  பன்னீர்ச்செல்வம் தொடுத்த வழக்குகளில்    அவருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆனாலும், கட்சிக்கொசி,   கட்சியின் கரை வேஷ்டி ஆகியவற்றுடன் பன்னீர் வலம் வந்தார். அவற்றை பன்னீர்  பாவிக்கக்கூடாது என நீதிமன்றத்துல் எடப்பாடி தரப்பு வழக்குத் தொடுத்தது.  கட்சிக்கொடி, கரை வேஷ்டி ஆகியவற்றை பன்னீர்ச்செல்வம் பாவிகக்கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.   நீதிமன்றத் தீர்ப்பனி எதிர்த்தும்  பன்னீர்  மேன் முறையீடு  செய்தார். விசாரணையின்  முடிவில் தீர்ப்பு வழங்குஅவது  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படியான  ஒரு நிலை வரும் என பன்னீர்ச்செல்வம் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

அதிமுக-விலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், கடித்த் தலைப்பு  ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால், இவற்றை பயன்படுத்தபன்னீர்  அணியினருக்கு தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 

அந்த மனுவில், கட்சியில் இருந்து தன்னை நீக்கியதற்கு எதிரான பிரதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், நீக்கத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த உத்தரவை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மேல்முறையீடு மனு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் இன்று

 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், தகுதி நீக்கம் செல்லும் என ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை அடிப்படையாக கொண்டு புதிய வழக்கில் தனி நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமலேயே இடைக்கால தடை விதித்தது தவறு என வாதிட்டார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், பன்னீர் செல்வம் தரப்பினர் சட்டரீதியான நிவாரணம் பெற உரிமை உள்ளது என உயர்நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அதனால், முழுமையாக அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக கருத முடியாது. எந்த வழக்கிற்கும் எதிர்தரப்பு நிவாரணம் பெற வாய்ப்புகள் வழங்கப்படும், ஆனால் இந்த வழக்கில் எந்த வாய்ப்புகளும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என தெரிவித்தார். 

இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2022 ஜூலை 11ம் தேதி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி பன்னீர் செல்வம் நீக்கப்பட்டதை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கட்சி சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் 3 முறை பன்னீர் செல்வம் தரப்பு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியது. ஆனால் தொடர்ந்து விளக்கம் அளிக்காததால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எந்த அடிப்படையிலும் ஒருதலை பட்சமாக நீதிமன்றம் உத்தரவிடவில்லை. நீதிமன்றங்கள் வழங்கிய சில நிவாரணங்களை பன்னீர் செல்வம் தரப்பினர் தவறாக பயன்படுத்துகின்றனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை நீதிமன்றங்கள் உறுதி செய்த பின் கட்சியின் உரிமையை எப்படி கோரமுடியும். 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இதுபோன்ற வழக்குகளை அனுமதிக்கக்கூடாது. அனுமதித்தால் கட்சியினரிடையே தேவையற்ற குழப்பம் ஏற்படும். அதனால், பன்னீர்செல்வம் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் பன்னீர் செல்வம் அதிமுக கொடியை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார் என தெரிவித்தார். 

இதையடுத்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின் பன்னீர்செல்வம் எப்படி உரிமை கோர முடியும்? பன்னீர்செல்வம் அதிமுக கட்சியில் இருந்து யாரையாவது நீக்க முடியுமா? அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.   

ஜெயலலிதா சிறைக்குச் செல்லும் போது முதல்வர் பதவியை பன்னீரிடம்  கொடுத்தார். சசிகலா சிறைக்குச் செல்லும்போது பன்னீரிடம்  இருந்தமுதல்வர்  பதவியை எடப்பாடியிடம்  கொடுத்தார். சசிகலா சிறையால் வந்த பின்னர் எடப்பாடி கண்டுகொள்ளவில்லை. சட்டம்  ஒரு இருட்டறை என அறிஞ்ர் அண்ணா சொன்னார் அண்ணாவின்  கட்சியில் உள்ள்ள  பன்னீருக்கு இந்த  உண்மை தெரியவில்லை.

 

No comments: