Saturday, August 21, 2021

ஒலிம்பிக்கில் சறுக்கிய தருணங்கள்.

 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் 100 பேக் ஸ்ட்ரோக்கின் அரையிறுதி நீச்சல் போட்டிக்காக    பிரான்ஸ் நாட்டு  வீரரான யோஹன் என்டோய்பிரரூவர்ட் கலந்துகொண்டார். மேலும் அவர் பந்தயத்தின் பாதியை நோக்கிச் சுழன்றுகொண்டிருந்தபோது,   சுவரில் மோதி நீந்த  முடியாமல் அவதிப்பட்டார். அதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

ஐரோப்பிய சம்பியனான யோஹன் என்டோய்பிரரூவர்ட் மீது  பிரெஞ்  நீச்சல்  கூட்டமைப்பு  நம்பிக்கை வைத்திருந்தது. அவர்  தொடர்ந்து  நீந்த  முடியாமல் ஏன்  வெளியேறினார் என்பதற்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, என்ன நடந்தது என்பதை யோஹன் என்டோய் பிரரூவர்ட் விளக்கமாகத் தெரிவித்தார், அவருக்கு இரண்டு கண்களிலும் கெரடோன்கோனஸ் என்ற நிலை உள்ளது,   ஐரோப்பிய சாம்பியன்ஷிப், அவரது உயர்கல்வி பரீட்சை என்பனவற்றால் அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை. அந்தத் தவறால் யோஹன் என்டோய் பிரரூவர்ட்டால் ஒலிம்பிக்கில் சாதிக்க  முடியவில்லை. அவர் தனது தவறுக்கு ஒரு சாக்குபோக்கு சொல்லவில்லை.

No comments: