Saturday, August 14, 2021

2022 வரை ஓடப்போவதில்லை 100 மீ சம்பியன் அறிவிப்பு


ஒலிம்பிக்   100 மீற்றர் சாம்பியன் லாமண்ட் மார்செல் ஜேக்கப்ஸ் 2022 வரை மீண்டும் ஓடமாட்டேன் என்று அறிவித்தார்.

  சமூக ஊடக தொடர்புகளில் ஒரு ரசிகருக்கு பதிலளித்த போது, தடகளத்தில் தனது அடுத்து எப்போது தோன்றுவீர்கள் என ரசிகர் ஒருவர்  கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்2022 ஆம் ஆண்டு  ரை  தடகளத்தில் என்னைப் பார்க முடியாது எனத் தெரிவித்தார்.

திங்களன்று டோக்கியோவிலிருந்து இத்தாலிக்கு  திரும்பிய பிறகு, அவர் ஒரு தேசிய ஹீரோவாக வரவேற்கப்பட்டார்.

  "ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிபெறுவது என் குழந்தை பருவ கனவு, வெளிப்படையாக ஒரு கனவு வித்தியாசமாக மாறலாம், ஆனால் இந்த இறுதிப் போட்டியில் வெற்றிபெறுவது ஒரு கனவு நனவாகும்" என்றார்.

ஒலிம்பிக்குப்பின்னர் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துள்லது. அவரது ஓட்டத்தைப் பார்க்க  ஆவலாக இருந்த ரசிகர்கள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

No comments: