Monday, August 30, 2021

இந்தியாவுக்கு முதல் தங்கம்


 டோக்கியோ பாராலிம்பிக்ஸ் 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அவானி தங்கம் வென்றார்

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில், மகளிருக்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அவானி லெஹரா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இது பாராலிம்பிக்ஸ் துப்பாக்கிச் சுடுதல் வரலாற்றில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள முதல் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்ற முதல் பெண்ணும் இவர்தான்.

அவானி 249.6 புள்ளிகள் எடுத்து உலகச் சாதனை படைத்துள்ளார். சீனாவின் க்யூபிங் ஜாங் 248.9 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், உக்ரைன் நாட்டின் இரினா 227.5 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.

No comments: