Monday, October 11, 2021

பாகிஸ்தான் கிறிக்கெற் அணியின் சீருடையால் சர்ச்சை


 இந்தியாவில் நடப்பதற்கு  ஏற்பாடு செய்யப்பட்ட ரி20 உலகக்கிண்ணப் போட்டி    கொரோனா பரவலால்   ஓமன்,  மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு  மாற்றப்பட்டது.  16 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கிண்ணப் போட்டி வருகிற 17‍   ஆம் திக‌தி தொடங்குகிறது. அமீரகத்தில்   போட்டி நடந்தாலும் அதற்குரிய அதிகாரபூர்வ உரிமம் இந்தியாவிடமே இருக்கிறது. அதனால் இது ‘ஐ.சி.சி. ஆண்கள் 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டி இந்தியா 2021’ என்ற பெயரிலேயே அழைக்கப்படும் என்று ஐ.சி.சி. ஏற்கனவே அறிவித்திருக்கிறது.

உலகக்கிண்ணப் போட்டியில் பங்கு பங்குபற்றும் அணிகள் வெளியிட்ட சீருடைகளில் "இந்தியா 2021" எனப் பொறிக்கப்பட்டுள்லது. ஆனால், பாகிஸ்தான் வெளியிட்ட  சீருடையில்  இந்தியாவின் பெயரை முடக்கி , ‘ ஐ.சி.சி. ஆண்கள் 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டி யூ.ஏ.இ.2021’ என்று பொறித்துள்ளது.

பாகிஸ்தான் க‌ப்டன் பாபர் அசாமின் சீருடையில் இவ்வாறு பொறிக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இருப்பினும் பாகிஸ்தான் இன்னும் அதிகாரபூர்வமாக தங்களது சீருடையை அறிமுகப்படுத்தவில்லை. எனவே இதே சீருடையுடன் ஆடுமா? அல்லது மாற்றம் செய்யுமா? என்பது சில தினங்களில் தெரிந்து விடும். 

No comments: