Wednesday, October 20, 2021

ஐபிஎல் சம்பியனானது டோனியின் சென்னை

  துபாய் சர்வதேச கிரிக்கெற் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021 தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கட்டாவுக்கு எதிராக விளையாடிய  சென்னை 27 ஓட்டங்களால் வெற்றி பெற்று நான்காவது முறை சம்பியனாகியது. 

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கட்டா அணித் தலைவர் இயன் மோகன் சென்னையைத் துடுப்பெடுத்தாடும்படி பணித்தார். கிறிக்கெற்றில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானது. கொல்கட்டாவின் நாணயச் சுழற்சியின் வெற்றி சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

சென்னைஅணி 20 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட்களை  இழந்து 192 ஓட்டங்கள் எடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்த கொல்கட்டா 165 ஓட்டங்கள்  டுத்தது. 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை அணி 4-வது முறையாக டோனி தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்றது.

சென்னைஅணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் - டூ பிளெசிஸ் கூட்டணி இந்த முறையும் சிஎஸ்கேவிற்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். பவர் ப்ளேவில் இந்த ஜோடி விக்கெற்றைப் பறிகொடுக்காமல் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை திணறடித்தனர்.

கொல்கத்தா பவர் ப்ளேயில் ஷகிப் அல் ஹசன், பெர்குசன், ஷிவம் மவி, வருண் சக்கரவர்த்தி என நான்கு   பந்து வீச்சாளர்களைப்   பயன்படுத்தியது. அதாவது இரண்டு சுழற்பந்து, இரண்டு வேகப்பந்து என மாற்றி மாற்றி பயன்படுத்தியது. ஆனால் எதிலுமே சென்னை வீரர்கள் சிக்கவில்லைப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 50 ஓட்டங்களை கடந்தது சென்னை.    61 ஓட்டங்கள் எடுத்திருந்த போது சென்னையின் முதல் விக்கெற் வீழ்ந்தது.  சென்னை அணி 6வது முறையாக பவர்பிளேயில் 50 ஓட்டங்கள்எடுத்தது.   சென்னை அணி பவர்பிளேயில் 50 ஓட்டங்கள் அடித்த அனைத்து போட்டிகளிலும்  அணி வெற்றி பெற்றுது. இது சென்னை அணி ரசிகர்ககும்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.


 சுனில் நரைன் பந்துவீச்சில்  32 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தார்.   ரொபின் உத்தப்பா 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள் பறக்கவிட்டு 31 ஓட்டங்கள் விளாசிய நிலையில் சுனில் நரைன் பந்துவீச்சில் தேவையில்லாத ரிவர்ஸ்ஷிப் விளையாடி எல்பிடபுள்யு முறையில்   வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் டூ பிளெசிஸ் ஆரம்பம் முதலே அதிரடி காட்டி வந்தார். சிக்ஸர் விளாசி அரைசதம் கடந்த டு ப்ளெசிஸ் கொல்கத்தாவை கலங்கடித்தார்.

நான்காவது வீரராக களமிறங்கிய மொயின் அலியும் தன் பங்கிற்கு அதிரடி காட்ட சென்னையின் ரன்ரேட் கிடுகிடுவென உயர்ந்ததுசென்னைஅணி 20 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட்களை  இழந்து 192 ஓட்டங்கள் எடுத்தது. தொடக்க வீரர் டூ பிளெசிஸ் 59 பந்துகளில் 86 ஓட்டங்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். மொயின் அலி 37 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை  களத்தில் இருந்தார். ஷிவம் மாவியின் கட்டுக்கோப்பான 20 ஆவது  ஓவரால்  சென்னை 200 ஓட்டங்களை  எட்ட முடியமல் போனது. முதல் 20 ஓவர்கலும் சென்னையின் கட்டுப்பாடிலேயே இருந்தன.

  193 ஓட்டங்ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியதுதொடக்க வீரர்களானசுப்மன் கில்,வெங்கடேஷ் ஐயர்  ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி ரன்ரேட்டை உயர்த்தினார்கள். பவர் ப்ளேவில் இந்த ஜோடி விக்கெட் இழப்பின்றி 55 ஓட்டங்கள் எடுத்தது. கொல்கத்தா  கொடுத்த நெருக்கடி கொடுத்ததால் போட்டியில் விறுவிறுப்பு அதிகரித்தது.

கொல்கத்தா 91 ஓட்டங்கள் எடுத்த போது  முதல் விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 32 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்து சர்துல் தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். திரும்பினார். அதே ஓவரில் நிதிஷ் ராணா ஏதும் எடுக்காமல் பிடி கொடுத்து வெளியேறினார். அப்போது ஆரம்பித்த சறுக்கல் கொல்கத்தா அணிக்கு இறுதி வரை தொடர்ந்ததுஅடுத்து களம் இறங்கிய  வீரர்கள் அனைஅவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேற  வெற்றித் தேவதை  சென்னையின் பக்கம்  போய் கம்பீரமாக உட்கார்ந்து விட்டார்.

கொல்கத்தா அணியின் 4-வது வீரராக சுனில் நரைன் இறக்கப்பட்டார். நரைன் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் இரண்டு ஓடங்களுடன் வெளியேறினார்விக்கெற்கள் வீழ்வதைப் ஒருட்படுத்தாது  நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடிய சுப்மன் கில்லும் அரைசதம் அடித்த கையோடு தீபக் சஹர் பந்துவீச்சில் வெளியேறினார். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா வீரர் சுப்மான் கில் 27 ஓட்டங்களில், ஜடேஜாவின் பந்து வீச்சில் தூக்கியடித்த போது டீப் மிட்விக்கெட் திசையில் அம்பத்தி ராயுடுவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.. ஆனால் பந்து அந்தரத்தில் பறந்த ஸ்பைடர் கமராவின் வயரில் பட்டு அதன் பிறகே கீழே இறங்கியது தெரியவந்ததால் விதிமுறைப்படி அந்த பந்து செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. சுப்மான்கில் மீண்டு துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்டார்.இந்த முடிவால் டோனி கடும் அதிருப்திக்குள்ளானார். தொடர்ந்து ஆடிய சுப்மான் கில் 51 ஓட்டங்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.


 

தினேஷ் கார்த்திக் வந்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அதிரடி காட்டினார். இதனால் போட்டியில் பரபரப்பு கூடும் என்ற நினைத்த கையோடு 9 ஓட்டங்களுடன் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். ஷகிப் அல் ஹசன் ஓட்டம் ஏதும் எடுக்காமலும் ராகுல் திரபாதி 2 ஓட்டங்களிலும் ப்டன் பொறுப்பில் மட்டும் இருந்து வந்த மோர்கன் 4 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

 

இதனால் கொல்கத்தா அணி 20  ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்கல் பரிதாப நிலைக்கு சென்றது.  20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்த கொல்கட்டா 165 ஓட்டங்கள்  டுத்தது. 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை அணி 4-வது முறையாக டோனி தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்றது.



No comments: