Thursday, October 7, 2021

காதலில் வென்ற தீபக் சஹார்


 பஞ்சாப்புக்கி எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை தோற்றாலும் சென்னையின்  வீரரான தீபக் சஹார், காதலில் வெற்றி பெற்றார். சென்னை தோற்றதால்  சோகத்தில் இருந்த ரசிகர்கள் இதனால் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

 போட்டி முடிந்த பிறகு திடீரென ரசிகர்கள் இருந்த பகுதிக்கு சென்ற தீபக் சஹார் அங்கிருந்த அயல்நாட்டு பெண்மணி ஒருவரிடம், தான் வைத்திருந்த மோதிரத்தை நீட்டி, மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்தினார். இதனால் அரங்கமே திடீரென ஆச்சரியப்பட்டது.   அந்த பெண்மணி என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டது.

  ஆனால் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அந்த இளம் பெண் தீபக் சஹாரின் காதலை ஏற்றுக்கொண்டார்.   அவர் கையில் வைத்திருந்த மோதிரத்தை பெற்றுக்கொண்டார். அவர்கள் இருவரும் கட்டியணையத்ததும், அரங்கில் இருந்தவர்கள் கைத்தட்டி உற்சாகமூட்ட, இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக இது மாறியது


 இந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட சாஹர், ‘புகைப்படம் எல்லாவற்றையும் சொல்லிவிடும். உங்கள் அனைவரும் வாழ்த்தும் தேவை என்று பதிவிட்டுள்ளார். தீபக் சாஹர் காதலை வெளிப்படுத்தும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

No comments: