Saturday, October 9, 2021

இந்திய அணியின் அடுத்தக‌ப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பிராட் ஹொக்


  இந்திய கிரிக்கெட் ரி 20 அணி   கப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகப் போவதாக அறிவித்த பின்னர்  பலரும் பலவிதமான கருத்துகலைத் தெரிவிக்கிறார்கள்.  இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹொக் கருத்துத் தெரிவிக்கையில்  ஷ்ரேயாஸ் ஐயரின் கிரிக்கெட் கரியர் மிகவும் சிறப்பான ஒன்று என்றும் அவரது பங்களிப்பு இந்திய அணிக்கு நிச்சயம் ஒன்று என்றும் எதிர்கால இந்தியாவின் க‌ப்டன் அவர்தான் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஷ்ரேயாஸ் ஐயர் காயத்திற்கு பிறகு தற்போது சிறப்பாக மீண்டு வந்துள்ளார். எப்பேர்பட்ட பிரஷர் சூழ்நிலையிலும் அவர் சிறப்பாக செயல்படக் கூடியவர். இந்தியாவின் ரி20 உலகக்கோப்பை அணியில் அவரை தேர்வு செய்யாதது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. நிச்சயம் அவர் இந்திய அணியின் வருங்கால க‌ப்டனாக மாறுவதற்கு அனைத்து தகுதியும் உள்ளது என கூறியுள்ளார்.

  இந்திய அணியின்  இளம் வீரரான ஷ்ரேயாஸ் ஐயர். தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்தார்.   கடந்த பெப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் காயம் அடைந்தார். அதன் பின்னர் ஐபிஎல் தொடரின் முதல் பாதியை தவறவிட்ட இவர் ரி20 உலக கிண்ண‌ தொடருக்கான அணியிலும் தேர்வு செய்யப்படவில்லை. மாறாக அவர் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது காயத்திலிருந்து முழுமையான குணமடைந்த நிலையில் தற்போது ஐபிஎல் தொட‌ரில் விளையாடுகிறார்.

 தோள்பட்டை பகுதியில் காயம் அடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரின் முதல் பாகத்தில் விளையாட வில்லை என்றாலும் தற்போது இரண்டாவது பாகத்தில் விளையாடி வருகிறார்.  முதல் பாதியில் காயம் காரணமாக வெளியேறி நிலையில் க‌ப்டன் பதவியை தவறவிட்டார்.  அவருக்கு பதிலாக அணியில் இளம் விக்கெட் கீப்பர் துடுப்பாட்ட வீரர் ரிஷப் பண்ட் க‌ப்டனாக செயல்பட்டு வருகிறார்.

No comments: