Tuesday, October 12, 2021

சென்னையை தூக்கி நிறுத்திய டோனி


 

 சென்னை அணியின் கப்டன் டோனியின் கனகச்சிதமான பினிஷிங், உத்தப்பா,கெய்க்வாட் ருதுராஜ் ஆகியோரின் அசத்தலான இணைப்பாட்டம் ஆகியவற்றால் துபாயில்   நடந்த ஐபிஎல் ரி20 போட்டியின் ப்ளே ஆஃப் போட்டியின் முதல் ஆட்டத்தில் டெல்லி  கப்பிட்டல்ஸ்  அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒன்பதாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது..

 14-வது .பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று  நிறைவடைந்த நிலையில்,  புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த டெல்லி ப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ரோயல் லஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள்பிளே-ஆப்சுற்றுக்கு முன்னேறியது.    இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் நா ண‌யச் சுழற்சியில்  வென்ற சென்னை அணியின் ப்டன் டோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய  டெல்லி கப்பிட்டல்ஸ்  அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்கள் சேர்த்தது. 173 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி 2 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் கடந்த 12 சீசன்களில் 9-வது முறையாக சிஎஸ்கே அணியை தல டோனி இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுவரை 2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018, 2019 & 2021 ஆண்டுகளில் சிஎஸ்கே அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.  சென்னை க‌ப்டன் டோனி தனது 10-வது ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளார்(2017-ல்புனே சூப்பர் ஜெயின்ட்ஸ்).

 இதுவரை ஐபிஎல் ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டியில் 6 முறை சேஸிங் எடுத்து 6 முறையும் டோனி அணிக்கு வெற்றி தேடித்தந்துள்ளார்.ப்ளே ஆஃப் சுற்றில் 2-வது முறையாக டெல்லி கப்பிட்டல்ஸ்  அணியை வீழ்த்தியது சிஎஸ்கேஅணி. இதற்கு முன் கடந்த 2019ம் ஆண்டு விசாகப்பட்டிணத்தில் நடந்த ஆட்டத்தில் குவாலிபயர் -2 ஆட்டத்தில் டெல்லியை வென்றது சிஎஸ்கே. இந்த முறை துபாயில் நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே வென்றுள்ளது.

டெல்லி கப்பிட்டல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. பிரித்வி ஷா, தவன் களம் இறங்கினர்.  தவன் 7 ஓட்டங்களுடனும், ஸ்ரேயாஸ் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தார்.  பவர்ப்ளேயில் இரன்டு விக்கெடலை இழந்து 51 ஓட்டங்கள் எடுத்தது டெல்லி .

அதிரடியாக விளையாடிய பிரித்விஷா 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். 4-வது வீரராகக் களமிறங்கிய அக்ஸர் படேல் 10 ஓட்டங்கள் எடுத்தபோது மொயின் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பெரிய ஷாட் அடிக்கும் முயற்சியில் ஜடேஜா பந்துவீச்சில் பிரித்விஷா 60 ஓட்டங்களில்(34 பந்துகள் 3 சிக்ஸர், 7பவுண்டரி) ஆட்டமிழந்தார்.சென்னை வீரர்கலை மிரட்டிய பிரித்விஷா ஆட்டமிழந்ததும் சென்னை ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். 50 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைஇழந்த டெல்லி, அடுத்த 30 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

வெற்றிக் காற்று சென்னையின் பக்கம் வீசிய போது ஐந்தாவது விக்கெட்டுக்கு இணைந்த  ஹெட்மெயர், ப்டன் ரிஷப் பந்த் ஜோடி சென்னை வீரர்கலின் பந்து வீச்சை எதிர்கொன்டு ஓட்டங்கலைக் குவித்தனர்.  இருவரும் இணைந்து அடித்த 83 ஓட்டங்கள் சென்னைக்கு சவாலானது.  ஹெட்மெயர் 37 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் 35 பந்துகளில் 51 ஓட்டங்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி தரப்பில் ஹேசல்வுட் இரண்டு விக்கெட்டுகளையும் ஜடேஜா,மியின் அலி, பிராவோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும்  வீழ்த்தினர்.


173 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி எனும் இலக்குடன்  சென்னைஅணி களமிறங்கியது. நோர்க்கியா வீசிய முதல் ஓவரிலேயே  ஒரு ஓட்டம் எடுத்த டூப்பிளசி விக்கெட்டை இழந்தார். வழக்கத்துக்கு மாறாக 3-வது வீரராக உத்தப்பா களமிறக்கப்பட்டார். இதற்கு முன் கொல்கத்தா அணியில் இருந்தபோது தொடக்க வீரராகவும், 3-வது வீரராகவும் களமிறங்கிதான் உத்தப்பா தனது அதிரடியால் கலக்கினார்.

அதை மனதில் வைத்து உத்தப்பா களமிறக்கப்பட்டார். தனது பணியை சிறப்பாக செய்த உத்தப்பா, டெல்லியின்  பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். பவர்ப்ளேயில் சென்னை அணி ஒரு விக்கெட்இழப்புக்கு 59 ஓட்டங்கள் எடுத்தது.டூப்பிளஸி   ஆட்டம் இழந்தது சென்னைக்கு பாதகமாக இருக்கவில்லை.

சிக்ஸர் பவுண்டரி என விளாசிய உத்தப்பா 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். சென்னை அணியில் இடம் பெற்ற உத்தப்பா அடிக்கும் முதல் அரைசதம் இதுவாகும்.  உத்தப்பா இந்த ஒரு போட்டியில் தன்னை நிரூபித்துவிட்டார்.


உதப்பாவுக்கு துணையாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். 2-வது விக்கெட்டுக்கு 110 ஓட்டங்கள் எடுத்த போது இருவரும் பிரிந்தனர். உத்தப்பா 44 பந்துகளில் 63 ஓட்டங்கள் எடுத்தபோது நிலையில் டாம் கரண் பந்துவீச்சில் வெளியேறினார்.

அடுத்துவந்த தாக்கூர் பெரியஷாட் அடிக்கும் முயற்சியில் டக் அவுட் ஆகினார், ராயுடு ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். .

ரொபின் உத்தப்பா, கெய்க்வாட் கூட்டணி 2-வது விக்கெட்டுக்கு110 ஓட்டங்கள் அடித்து அருமையான தளம் அமைத்துக் கொடுத்தனர். ஆனால், அடுத்தடுத்து நடுவரிசையில் களமிறங்கியவர்கள் கோட்டைவிட்டனர்.    

12 பந்துகளில் 24 ஓட்டங்கள் அடித்தால் சென்னை வெற்றி பெறும்.

19 ஆவது ஓவரின் முதல் பந்தை ஓங்கி அடித்த ருதுராஜ் பவுண்டரி எல்லையில் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜாவை எதிர் பார்த்தபோது டோனி களம் இறங்கினார். டெல்லி ரசிகர்கள்  மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், கிரேட் ஃபினிஷர் என்று அழைக்கப்படும் டோனி களமிறங்கி தனக்கே உரிய பாணியில் ஆட்டத்தை முடித்துவைத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இரண்டாவது பந்தை எதிர்கொண்ட மொயின் அலி ஒரு ஓஆட்ம் எடுத்தார்.


மூன்றாவ‌து பந்தை டோனி அடிக்கவில்லை. சென்னை ரசிகர்கள் தலையில் கை வைத்தனர். டெல்லி ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

ஐந்தாவது பந்தை டோனி சிக்ஸருக்கு அனுப்பினார். அரங்கம் ஆர்ப்பரித்தது.

ஆறாவது பந்தை எதிர் கொன்ட டோனி ஒட்டம் அடிக்கவில்லை. 19  ஒரு விக்கெற்றை இழந்த சென்னை  11 ஓட்டங்கள் எடுத்தது. 20 ஆவது ஓவரில் 13  ஓட்டங்கள் தேவை.

20 ஆவது ஓவரை ரபாடா வீசுவார் என எதிர் பார்த்தபோது, இந்தப் போட்டியில் திறமையாகப் பந்து வீசி 3 விக்கெற்களை வீழ்த்திய டொம் கரனிடம் ரிஷப் பன்ட் பந்தைக் கொடுத்தார். இந்தத் தொடரில் இளம் வீரர்கலிடம் விக்கெட்டைப் பறிகொடுத்த டோனியின் அனுபவம் கைகொடுக்குமா  அல்லது  அவர் வீழ்ந்து விடுவாரா  என்ற எதிர் பார்ப்பு எகிறியது.

டொம் கரனின் முதல் பந்தில் மொயின் அலி ஆட்டமிழக்க அரங்கம்  உறைந்தது. ஜடேஜா உள்ளே வந்தார்.   இரண்டாவ‌து பந்தை  எதிர் கொள்ள டோனி தயாரானார். ஒரு ஓட்டம் எடுத்து ஜடேஜா அடிப்பதர்கு டோனி வழி விடுவார் என எதிர் பார்ப்பு நிலவிய வேளையில்  டோனி பவுண்டரி அடித்தார்.

மூன்றாவ‌து பந்தையும்  டோனி பவுண்டரிக்கு அனுப்பினார்.

எட்டு ஓட்டங்கள் அடிக்கப்பட்ட நிலையில் அடுத்த பந்தை டொம் கரன் வைட்டாக வீசினார். அதற்கு ஒரு ஓட்டம்  கிடைத்தது.

மூன்று பந்துகளில் நான்கு ஓட்டங்கள் தேவை.

நான்காவது பந்தில் டோனி நான்கு  ஓட்டங்கள் அடிக்க சென்னை வெற்ரி பெற்று ஒன்பதாவது இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.


கடந்த ஐபிஎல்லில் முதல் அணியாக வெளியேறிய சென்னை இந்த ஐபிஎல்லில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. கடந்த  ஆன்டு மீண்டு[ம்] வருவோம் என சொன்ன டோனி இந்த  ஆண்டு அதனை செய்து காட்டியுள்ளார்.

50 பந்துகளில் 70 ஓட்டங்கள்(2சிக்ஸர்கள் 5பவுண்டரிகள்) அடித்து ஆட்டமிழந்த கெய்க்வாட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

தோனியின் துடுப்பாட்டம் குறித்து பலவிதமான விமர்சனங்கள், தல போய்டுங்க, போதும் தல, கவுரமாக ரிட்டயர் ஆகிடுங்க என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வந்தன. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூட டோனியை கிண்டலாக விமர்சித்தனர். ஆனால், அனைத்துக்கும் தனது துடுப்பால்டோனி பதில் அளித்தார்.

ஆவேஷ் கான் ஓவரில் தான் சந்தித்த முதல் பந்தில் ஓட்டம் எடுக்காமல் அடுத்த பந்தில் மிட் விக்கெட்டில் சிக்ஸர் தூக்கியபோதே டோனியை விமர்சித்தவர்கள் வாய் அடைத்துப் போகினர்.

டோனி 6 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரி உள்ளிட்ட 18 ஓட்டக்ன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டோனியின் ஸ்ட்ரேக் ரேட் 300 ஆக இருந்து அவரின் ஆட்டம் பற்றிய‌ விமர்சனத்துக்கு சரியான பதிலடியாக இருந்தது.

லீக் சுற்றில் குருவை மிஞ்சினார் சிஷ்யன் என்று டெல்லி கப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் பெருமைப்பட்டுக் கொண்டார். ஆனால் இந்த ஆட்டத்தில் டோனி தனக்கேஉரிய ஸ்டைலில் ஆட்டத்தை ஃபினிஷ் செய்து ரிஷப் பந்த் தோளில் தட்டிக் கொடுத்து, “நீ படித்த ஸ்கூலில் நான் ஹெட்மாஸ்டர் என்று சிறிய புன்னகையுடன் கடந்து சென்றார்.

டோனி வீழ்ந்துவிடுவார், அடுத்த சீசனில் ஆடுவதற்கு அவருக்கு  திறமை இல்லை, மென்ட்டர் அல்லது பயிற்சியாளராகவோ வர முடியும் என்று ஆருடம் கணிக்கப்பட்டது. ஆனால், 40 வயதானாலும் சிங்கம் சிங்கம் தான் என்ற ரீதியில் தனது கிரேட்ஃபினிஷிங்கை நிரூபித்துள்ளார், தனது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்டை 300 வைத்து திகைக்க வைத்துள்ளார். தன்னை விமர்சித்தவர்களுக்கு வீழ்வேன் என நினைத்தாயோ என்ற ரீதியில் டோனி பேட்டிங்கால் கேள்வி எழுப்பிவிட்டார்.

 

No comments: