Wednesday, October 6, 2021

மும்பை வீரர்கள் மீது பிசிசிஐ அதிருப்தி


 உலகக்கிண்ண ரி 20 போட்டியில் விளையாடுவதற்கு பெயரிடப்பட்ட  இந்திய கிரிக்கெட் வீரர்களின் செயற்பாடுகள்  ஐபிஎல்  தொடரில்  எதிர்பார்த்தவாறு இல்லாமல் இருப்பதால்  பிசிசிஐ  அதிருப்தியில் உள்ளது.  மும்பை அணியில் விளையாடும்  ஹர்திக் பாண்ட்யா, ராகுல் சஹார், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகிய நான்கு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பிரகாசிக்கவில்லை.

 சூர்யகுமார் யாதவ்  6 போட்டிகளில்  மொத்தமாக  63 ஓட்டங்களை மட்டுமே அடித்துள்ளார். இஷான் கிஷான் மோசமான ஃபார்ம் காரணமாக மும்பையின் விளையாடும் அணியில் இருந்து நீக்கப்பட்டார். சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சஹார் கடந்த இரண்டு போட்டிகளில் ஒரு விக்கெட் கூட எடுக்காததால் அணியில் இடம் பெறவில்லை.ஹர்திக் பாண்ட்யாவின் நிலைமையே மோசமாக உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் அவர் ஒரு ஓவர் கூட பந்துவீசவில்லை.   துடுப்பாட்டத்தில் பஞ்சாப்புக்கு எதிராக  ஓட்டம் அடித்துள்ளார்.அடித்துள்ளார்.


ரி20 உலகக் கிண்ணத் தொடருக்காக தேர்வு செய்யப்பட்ட பல்வேறு வீரர்கள் ஐபிஎல்-ல் தொடர்ந்து மோசமாக விளையாடுகின்றனர். அவர்களின் ஃபார்ம் பிசிசிஐ-க்கு பெரும் தலைவலியை உண்டாக்கியுள்ளது. இதனால் இந்திய அணியில் மாற்றம் கொண்டு வர வேண்டிய சூழலும் ஏற்படலாம்.

டி20 உலகக்கோப்பை தொடருக்காக தேர்வு செய்யப்பட்ட பல்வேறு வீரர்கள் ஐபிஎல்-ல் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். அவர்களின் ஃபார்ம் பிசிசிஐ-க்கு பெரும் தலைவலியை உண்டாக்கியுள்ளது. இதனால் இந்திய அணியில் மாற்றம் கொண்டு வர வேண்டிய சூழலும் ஏற்படலாம்.


No comments: