Tuesday, October 19, 2021

இந்தியாவின் நீல சீருடையில் மீண்டும் டோனி


 20 ஓவர் உலக கிண்ணப் போட்டிக்கான 2-வது சுற்றில் நேரடியாக விளையாடும் இந்திய அணி குரூப் 2 பிரிவில் உள்ளது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 24‍ ஆம் திகதி எதிர்கொள்கிறது.இந்திய அணிக்கு 2 உலக கோப்பையை வென்று பெருமை சேர்த்தவர் மகேந்திரசிங் டோனி.

சர்வதேச போட்டியில் இருந்து கடந்த ஆண்டு ஓய்வுபெறுவதாக அறிவித்த டோனி தற்போது .பி.எல். போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். சமீபத்தில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4-வது .பி.எல். கோப்பையை வென்று கொடுத்தார்.

இதற்கிடையே ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக் கிண்ண  போட்டிக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக 40 வயதான டோனி நியமிக்கப்பட்டு உள்ளார்.


டோனியின் அறிவுரை, தந்திரமான முடிவு இந்திய அணிக்கு தேவைப்படுவதால் அவரை கிரிக்கெட் சபைபயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து உள்ளது. அதன்படி அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் டோனி இந்திய அணியோடு இணைந்து கொண்டார். .பி.எல். போட்டியை முடித்த பிறகு அவர் நாடு திரும்பாமல் அங்கேயே தங்கி இருந்தார். 20 ஓவர் உலகக்கிண்ணபோட்டி அங்கு நடைபெறுவதால் அவர் இந்திய அணியோடு சேர்ந்து கொண்டார். பயிற்சியின் போது டோனியின் ஆலோசனை இந்திய வீரர்களுக்கு பயன் உள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: