Wednesday, October 6, 2021

சென்னை மைதான‌த்தில் ஓய்வுபெற டோனி விருப்பம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர்  டோனி இந்த ஐபிஎல் தொடருடன்  ஓய்வு பெறுவர் என பலரும் ஆரூடம் தெரிவித்தனர். துடுப்பாடும் திறன் குறைந்ததால் டோனி ஓய்வு பெற வேன்டும் என விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தனர். அவற்றை எல்லாம் பொய்யாக்கி உள்ளார் டோனி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் நான் விளையாடுவதை நீங்கள் பார்க்கலாம். சென்னைக்கு மீண்டும் வருவோம். எனது கடைசி ஆட்டம் சென்னையில்தான் நடக்கும் என்று டோனி கூறியதால் அவரது ரசிகர்கள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் மூலம் அடுத்த .பி.எல். தொடரிலும்  தான் விளையாட உள்ளதை அவர் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

2020ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின்போது  இதுதான் சிஎஸ்கே அணிக்கான கடைசி ஆட்டமா என வர்ணனையாளர்  டோனியிடம், கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த டோனி, கண்டிப்பாக இல்லை எனக்கூறினார்.

இந்நிலையில், இந்தியா சிமெண்ட்ஸின் 75வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஆன்லைன் வழியாக ரசிகர்களுடன் டோனி கலந்துரையாடினார். அப்போதுஓய்வை பொறுத்தவரை நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவதை நீங்கள் பார்க்கலாம். சென்னைக்கு மீண்டும் வருவோம். எனது கடைசி ஆட்டம் சென்னையில்தான் நடக்கும்அப்போது ரசிகர்களையும் சந்திப்பேன்என்று டோனி குறிப்பிட்டார்

No comments: