Saturday, October 9, 2021

இளம்வீரர் சாஹலுக்கு ஹர்பஜன் சிங் ஆதரவு


   ஐக்கிய அரபு  எமிரேட்சில்  தினங்களில் ஏழாவது ரி20 உலகக் கிண்ண தொடர் துவங்க உள்ளது. இந்த உலகக் கிண்ண  தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்திய அணியில் குறிப்பிட்ட சில வீரர்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்ட சில வீரர்கள் நீக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இந்திய அணி தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டதால் இனி அந்த அணியில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படாது என்று உறுதியாகியுள்ளது.

ஆனாலும் இன்றளவும் இந்திய அணியில் தேர்வாகியுள்ள வீரர்கள் குறித்த விமர்சனங்களை பல்வேறு முன்னாள் வீரர்களும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்த உலகக் கிண்ணத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத இளம் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் சில விடயங்களை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் டிவிட்டரில் , " நீங்கள் எப்பொழுதும் உங்களுடைய சிறப்பான ஆட்டத்தை தான் இந்திய அணிக்கு கொடுத்துள்ளீர்கள். அதை தொடர்ந்து செய்யுங்கள். நீங்கள் சரியான வேகத்தில் தொடர்ந்து பந்துவீச வேண்டும். மிகவும் ஸ்லோவாக பந்துவீச வேண்டாம். எனக்கு நிச்கிண்ண கோப்பை இந்திய அணியில் இடம் பெற்று விளையாடுவீர்கள் நீங்கள் ஒரு சம்பியன்" என தெரிவித்துள்ளார்.


  கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் சாஹல் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கிண்ணத்  தொடருக்கு பின்னர் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவ்வேளையில் தற்போது ராகுல் சாகர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் உலகக் கிண்ணஅணியில் இடம் பிடித்துள்ளனர்.

No comments: